நேபாளத்தில் ஏற்பட்ட துயரம் மிகவும் வருந்தத்தக்கது அதே நேரம் இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது என்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பார் வேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நமது அண்டை நாடான நேபாளம்,இந்தியர்களின் தொன்மையான சுற்றுலாத் தலமாகும். வெறும் சுற்றுலாத்தலம் என்பதோடு மட்டுமல்லாது, ஆன்மீக வழிபாட்டு யாத்திரை மேற்கொள்ளும் பல லட்சம் பக்தர்களின் புனிதத்தலமாகவும் விளங்குகிறது. உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் மலை சிகரத்தை தன்னகத்தே கொண்டிருக்கும் நேபாளம், இந்தியாவுடன் கலாச்சார பண்பாட்டு உறவினையும் கொண்ட நாடாகும். அந்த நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நம்மையெல்லாம் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. காட்மண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள பல நகரங்கள்,கிராமங்கள் என பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இந்த நில அதிர்வில் சிக்கி, குடும்பத்துடன் புதையுண்டு போயிருக்கிறார்கள். யுனெஸ்கோவால் கண்டறியப்பட்டு,பாதுகாக்கப்பட்டுவந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சில கட்டிடங்களும்,கோபுரங்களும்கூட இந்த பூகம்பத்தினால் இடிந்து போயுள்ளன. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள பலபேர் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என்பது சிறிது ஆறுதல் அளிக்கிறது. அதேநேரத்தில்,பீகார்,உத்தரப்பிரதேசம்,டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இந்த நில அதிர்வின் மூலம் பலர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த வேதனைக்குறியதாகும். தகவல் அறிந்ததும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேபாளத்திற்கு சிறப்பு அதிரடி மீட்புப் படையையும், உயிர் காக்கும் மருந்து, உணவுப் பொருட்கள், ஆடைகள் என அவசரத் தேவைக்கான அனைத்து பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும். அதே போல்,பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு உதவிக்கரம் நீட்டும் என கூறி ,அம்மாநில முதல்வருக்கு வாக்களித்துள்ளார். இயற்கையின் கொடுஞ்சீற்றத்தை மனிதனால் வெல்லமுடியாது என்றாலும், நிலைமையின் ஆபத்தை ஓரளவிற்கு தடுக்கமுடியும் என்பதே உண்மை. அந்த வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளில் இந்திய ஜனநாயக கட்சியும் தன்னை இணைத்துக்கொள்ளும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். – என்று தெரிவித்துள்ளார்.
Less than 1 min.Read
நேபாள துயரத்தில் பங்கெடுத்த இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது: பாரி வேந்தர்
Hot this week
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!
தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
Entertainment News
Previous article
Next article

