December 6, 2025, 8:51 AM
23.8 C
Chennai

போக்சோ சட்டத்தில் கல்லுாரி மாணவன் திருமாவளவன் கைது..!

போக்சோ சட்டத்தில் கல்லுாரி மாணவன் திருமாவளவன் கைது..!

தோழியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம் இறைச்சிமஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் காளிமுத்து என்ற திருமாவளவன் (வயது 19). இவா் தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., படித்து வருகிறார். இந்த நிலையில் காமராஜபுரத்தை சேர்ந்த சில பெண்கள் இவருடன் நட்பாக பழகி வந்துள்ளனர். அடிக்கடி நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசிக்கொள்வது வழக்கமாக்கி கொண்டிருந்தனா்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதை கொண்டாடுவதற்காக, அந்த பெண்ணின் உறவுக்கார பெண்கள் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு திருமாவளவன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில பெண்களுடன் சேர்ந்து அவர் செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அவருடன் நட்புடன் பழகி வந்த சில பெண்கள், எதார்த்தமாக அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதன் பிறகு திருமாவளவன் செல்பி எடுத்த புகைப்படத்தில், ஒரு பெண்ணின் புகைப்படத்தை மட்டும் பிரித்து எடுத்து, அதை சமூக வலைதளத்தில் புகைப்படத்தையும், அதன் கீழே தகாத வார்த்தைகளையும் சேர்த்து, தவறான முறையில் நண்பர்கள் குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட பெண், திருமாவளவனிடம் சென்று கேட்டபோது. அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசி, அவரை திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 20–ந்தேதி புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து திருமாவளவன் தலைமறைவாகி விட்டார். புகாரின் அடிப்படையில் போலீசார் திருமாவளவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் அவர் தாராபுரம் பஸ் நிலையம் அருகே நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று திருமாவளவனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டிருப்பது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.theruma - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories