போக்சோ சட்டத்தில் கல்லுாரி மாணவன் திருமாவளவன் கைது..!

போக்சோ சட்டத்தில் கல்லுாரி மாணவன் திருமாவளவன் கைது..!

தோழியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரித்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம் இறைச்சிமஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் காளிமுத்து என்ற திருமாவளவன் (வயது 19). இவா் தாராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ., படித்து வருகிறார். இந்த நிலையில் காமராஜபுரத்தை சேர்ந்த சில பெண்கள் இவருடன் நட்பாக பழகி வந்துள்ளனர். அடிக்கடி நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசிக்கொள்வது வழக்கமாக்கி கொண்டிருந்தனா்.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதை கொண்டாடுவதற்காக, அந்த பெண்ணின் உறவுக்கார பெண்கள் திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு திருமாவளவன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சில பெண்களுடன் சேர்ந்து அவர் செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அவருடன் நட்புடன் பழகி வந்த சில பெண்கள், எதார்த்தமாக அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அதன் பிறகு திருமாவளவன் செல்பி எடுத்த புகைப்படத்தில், ஒரு பெண்ணின் புகைப்படத்தை மட்டும் பிரித்து எடுத்து, அதை சமூக வலைதளத்தில் புகைப்படத்தையும், அதன் கீழே தகாத வார்த்தைகளையும் சேர்த்து, தவறான முறையில் நண்பர்கள் குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட பெண், திருமாவளவனிடம் சென்று கேட்டபோது. அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசி, அவரை திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 20–ந்தேதி புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து திருமாவளவன் தலைமறைவாகி விட்டார். புகாரின் அடிப்படையில் போலீசார் திருமாவளவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் அவர் தாராபுரம் பஸ் நிலையம் அருகே நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று திருமாவளவனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டிருப்பது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.theruma - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories