December 6, 2025, 9:23 AM
26.8 C
Chennai

துப்பாக்கியை காட்டி சுட்டுடுவேன் என மிரட்டினார் தந்தை! 100க்கு போன் செய்து மாட்டிவிட்டார் மகள்!

gun shoot - 2025

துறையூரை அடுத்த டி.முருங்கபட்டி காட்டுகொட்டகையில் குடும்ப தகராறில் நாட்டுத் துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப் பட்டார்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உள்ள உப்பிலியபுரம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது டி முருங்கபட்டி காட்டுகொட்டகை! இங்கே வசித்து வருபவர், 67 வயதாகும் பழனிச்சாமி! கூலி வேலை செய்து வரும் இவர், நேற்று இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பினார்!

அப்போது இவரது மனைவி உண்ணாமுலை மற்றும் மகன் பெரியசாமி (வயது 25) மகள் கவிதா (வயது 14) மூவரும் வீட்டில் இருந்தனர். அப்போது பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .

இதில் ஆத்திரமடைந்த பழனிச்சாமி வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மனைவி, மகன், மகள் ஆகியோரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது!

இதையடுத்து மகள் கவிதா செல்போன் மூலம் 100க்கு போன் செய்தார். தனது தந்தை துப்பாக்கியை வைத்து மிரட்டுவதாகக் கூறி, தாங்கள் வசிக்கும் இடத்தையும் கூறியுள்ளார்.

தகவலை பெற்றுக் கொண்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிச்சாமி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர்.

பின்பு பழனிச்சாமியை அழைத்துச் சென்று விசாரணை செய்த போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் பொழுது உங்களிடம் துப்பாக்கி எப்படி வந்தது? துப்பாக்கிக்கு போதுமான ஆவணங்கள் உள்ளதா? என்றெல்லாம் விசாரணை செய்தனர்!

அப்போது பழனிச்சாமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் இந்த நாட்டு துப்பாக்கியை சூக்கலாம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 48) என்பவரிடமிருந்து வாங்கியதாகக் கூறியுள்ளார்.

பின்பு மூர்த்தியைப் பிடித்து விசாரணை செய்தபோது,  நாட்டுதுப்பாக்கிக்கு போதுமான ஆவணங்கள் இல்லாத கள்ளத்துப்பாக்கி என்பது தெரியவந்தது!

இதை அடுத்து உப்பிலியபுரம் போலீசார் பழனிச்சாமி மற்றும் கள்ளத் துப்பாக்கியை விற்ற மூர்த்தி ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மேலும் இதுபோன்று அந்தப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்துள்ளார்களா? அதற்கு அனுமதி பெற்றுள்ளார்களா என்றெல்லாம் விசாரணை செய்து வருகிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories