December 6, 2025, 3:13 AM
24.9 C
Chennai

மக்களவை தேர்தல் வெற்றி உதயநிதிக்கு இளைஞரணி செயலாளா் பதவி. (பரிசு)…….!

uthayanethi - 2025இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று அசுர பலரத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 37 இடங்களில் திமுகவும், தேனியில் மட்டும் அதிமுகவும் வெற்றிப் பெற 37:1 என்ற ரேஷியோவில் மெகா மெஜாரிட்டி பெற்று எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பவிருக்கிறது திமுக.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் திமுகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் குறித்து திமுகவின் இளம் உடன் பிறப்புகள் பாஸிட்டிவ் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

அதன் எதிரொலியாக, திமுகவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் தலைமைக்கு ஒருசேர கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள்.

அந்த கடிதத்தில், உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரமும், அணுகுமுறையும் பெருவாரியான கட்சி தொண்டர்களையும் மக்களையும் கவர்ந்ததாகவும், சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் வென்றதிலும் உதயநிதியில் பங்கு திருப்தி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவிர, தற்போது திமுக இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் வெள்ளக்கோவில் சாமிநாதனின் செயல்பாட்டில் கட்சியினருக்கு இடையே அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுவதால், உதயநிதியை அப்பதவியில் அமர வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளராகும் உதயநிதி ஸ்டாலின்
அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும், திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை மிக முக்கியமான காரணமாகப் பலரால் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கட்சி மேலிடம் இதை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 1ம் தேதி உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்றுக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் திமுகவின் இளம் உடன்பிறப்புகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உதயநிதியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜாவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் பேசிய போது, “கட்சிப் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்க வேண்டும் என்பது எங்கள் பலரது விருப்பமாகும்.

இதைக் கட்சி மேலிடத்திலும் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம். ஆனால், அவரை அப்பதவிக்கு தேர்வு செய்வது என்பது தலைமையின் முடிவு.

உதயநிதி அப்பதவிக்கு வந்தால், நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைவோம். அந்த அளவிற்கு நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவர் உழைத்திருக்கிறார். கட்சித் தலைமையின் முடிவு எதுவாயினும் நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories