மக்களவை தேர்தல் வெற்றி உதயநிதிக்கு இளைஞரணி செயலாளா் பதவி. (பரிசு)…….!

uthayanethi - 2026இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று அசுர பலரத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 37 இடங்களில் திமுகவும், தேனியில் மட்டும் அதிமுகவும் வெற்றிப் பெற 37:1 என்ற ரேஷியோவில் மெகா மெஜாரிட்டி பெற்று எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்பவிருக்கிறது திமுக.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தமிழகத்தில் திமுகவின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் குறித்து திமுகவின் இளம் உடன் பிறப்புகள் பாஸிட்டிவ் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

அதன் எதிரொலியாக, திமுகவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும், உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் தலைமைக்கு ஒருசேர கடிதங்கள் அனுப்பி வருகிறார்கள்.

அந்த கடிதத்தில், உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரமும், அணுகுமுறையும் பெருவாரியான கட்சி தொண்டர்களையும் மக்களையும் கவர்ந்ததாகவும், சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக 13 இடங்களில் வென்றதிலும் உதயநிதியில் பங்கு திருப்தி அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

தவிர, தற்போது திமுக இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வரும் வெள்ளக்கோவில் சாமிநாதனின் செயல்பாட்டில் கட்சியினருக்கு இடையே அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுவதால், உதயநிதியை அப்பதவியில் அமர வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளராகும் உதயநிதி ஸ்டாலின்
அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்திலும், திமுகவின் வெற்றிக்கு உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரை மிக முக்கியமான காரணமாகப் பலரால் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கட்சி மேலிடம் இதை பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 1ம் தேதி உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்றுக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகவல் திமுகவின் இளம் உடன்பிறப்புகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து உதயநிதியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜாவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பில் பேசிய போது, “கட்சிப் பணியில் பல வருடங்களாக ஈடுபட்டு வரும் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளராக பதவியேற்க வேண்டும் என்பது எங்கள் பலரது விருப்பமாகும்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இதைக் கட்சி மேலிடத்திலும் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம். ஆனால், அவரை அப்பதவிக்கு தேர்வு செய்வது என்பது தலைமையின் முடிவு.

உதயநிதி அப்பதவிக்கு வந்தால், நாங்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைவோம். அந்த அளவிற்கு நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அவர் உழைத்திருக்கிறார். கட்சித் தலைமையின் முடிவு எதுவாயினும் நாங்கள் அதற்கு கட்டுப்படுவோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories