இளையராஜாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அருகே பூந்தமல்லியில் நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது
மாலை 6 மணிக்கு தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி 8 மணிக்குத்தான் தொடங்கப்பட்டது! இந்த நிகழ்ச்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் அங்கு செய்யப்படவில்லை.
டிக்கெட் வரிசை எண்ணும் சரியாக பராமரிக்கப்படவில்லை. எனவே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பலருக்கு இருக்கை இல்லை. இது போக… குடிக்க தண்ணீர் கேட்ட ரசிகர் ஒருவரிடம் என் இசையை கேட்க வந்த உங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாதா எனக் கேட்டு கடுப்பு ஏற்றினார் இசை ஞானி.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தின் செலவில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும் இதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று உறுதி கூறினார்.


