காதல் கணவனை சேர்த்து வைக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு….!

maduri lady - 2026

காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிக்குமாரை பொன்னம்மாள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பழனிக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் பழனிக்குமார் குறித்த எந்த தகவலும் . இந்த நிலையில் அவர் மேலூர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில், தனது கணவனை அவரது பெற்றோர் மறைத்து வைத்துள்ளதாகவும், எனவே அவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்க்குமாறும் கூறியிருந்தார்.

இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் பையுடன் பொன்னம்மாள் வந்தார்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

அவர் கலெக்டரின் கார் நிறுத்தப்பட்ட பகுதிக்கு வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் மண்எண்ணெய் கேன் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்குமாறு போலீசார் உள்பட பலரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது பிரச்சினைக்கு கலெக்டர் மூலம் தீர்வு காண இங்கு வந்தேன்.

அங்கும் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கலாம் என்று வந்ததாக போலீசாரிடம் கூறினார்.

உடனே போலீசார் அவரை விசாரணைக்காக தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன்னம்மாள் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories