December 6, 2025, 7:50 AM
23.8 C
Chennai

காதல் கணவனை சேர்த்து வைக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு….!

maduri lady - 2025

காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிக்குமாரை பொன்னம்மாள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பழனிக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் பழனிக்குமார் குறித்த எந்த தகவலும் . இந்த நிலையில் அவர் மேலூர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில், தனது கணவனை அவரது பெற்றோர் மறைத்து வைத்துள்ளதாகவும், எனவே அவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்க்குமாறும் கூறியிருந்தார்.

இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் பையுடன் பொன்னம்மாள் வந்தார்.

அவர் கலெக்டரின் கார் நிறுத்தப்பட்ட பகுதிக்கு வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் மண்எண்ணெய் கேன் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்குமாறு போலீசார் உள்பட பலரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது பிரச்சினைக்கு கலெக்டர் மூலம் தீர்வு காண இங்கு வந்தேன்.

அங்கும் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கலாம் என்று வந்ததாக போலீசாரிடம் கூறினார்.

உடனே போலீசார் அவரை விசாரணைக்காக தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன்னம்மாள் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories