காதல் கணவனை சேர்த்து வைக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு….!

maduri lady - 2026

காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 24). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழனிக்குமாரை பொன்னம்மாள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற பழனிக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் பழனிக்குமார் குறித்த எந்த தகவலும் . இந்த நிலையில் அவர் மேலூர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார்.

அதில், தனது கணவனை அவரது பெற்றோர் மறைத்து வைத்துள்ளதாகவும், எனவே அவரை கண்டுபிடித்து தன்னுடன் சேர்க்குமாறும் கூறியிருந்தார்.

இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் பையுடன் பொன்னம்மாள் வந்தார்.

அவர் கலெக்டரின் கார் நிறுத்தப்பட்ட பகுதிக்கு வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் மண்எண்ணெய் கேன் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்குமாறு போலீசார் உள்பட பலரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனது பிரச்சினைக்கு கலெக்டர் மூலம் தீர்வு காண இங்கு வந்தேன்.

அங்கும் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்கலாம் என்று வந்ததாக போலீசாரிடம் கூறினார்.

உடனே போலீசார் அவரை விசாரணைக்காக தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு பொன்னம்மாள் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories