வேலூர் ஆர்யாஸ் மோர்க்குழம்பு

நன்றி-62077054 2552839834943438 2951649861096701952 n - 2026Rajan BN-மத்யமர் குருப்

செய்முறை!

தேங்காயத் துருவல், ஒரே ஒரு பச்சை மிளகாய், சீரகம் ஒரு ஸ்பூன், வாசனைக்கு நாலு மிளகு, நாலு தனியா, மறக்காமல் ஒரு பெரிய பட்டை இரண்டு கிராம்பு, ஒரு பிஞ்ச் வெந்தயம், இரண்டு ஸ்பூன் வறுத்த கடலை (பொட்டுக்கடலை), கொஞ்சம் மஞ்சள் தூள்….

நீர் விட்டு மிக்சியில் எதையும் வறுக்காமல் அரைக்கவும். துவையல் பதத்திற்கு அரைக்கவும்….

பின்னர் ஒரு பெரிய வெங்காயம், நாலு குறுக்கே வெட்டின பச்சை மிளகாய், (இஞ்சி சேர்க்கலாம்…. இல்லைன்னாலும் பரவாயில்லை), ஒரு எண்ணிக்கை பூண்டை நறுக்காமல், நசுக்கி, தோலை பிரித்தெடுக்கவும்… நறுக்கின பூண்டை விட, நசுக்கிய பூண்டில் எஃப்பெக்ட் அதிகம்.

வாணலியில் கடுகு, கொஞ்சமாக பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து அதன் மேல் முதலில் 30 செகண்ட் பூண்டு, மிளகாயை வதக்கி அதன் பின் வெங்காயம் போட்டு கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்….

மோர்க்குழம்பில் இரண்டு விதமான மோரை உபயோகிக்கலாம். ஒன்று புளித்த மோர்….. புளிப்பு சுவையைத் தானாகவே கொடுக்கும். (பெரும்பாலும் வீடுகளில் மீந்து போன புளித்த மோரை, வெடி மோராகவோ, மோர்க்குழம்பாகவோ செய்வதே வழக்கம்…. சிக்கனம் கருதி). ஆனால் புதியதாக தயிரை சிலுப்பி செய்யும் மார்க் குழம்பே சாலச் சிறந்தது…. தயிரை நன்றாக சிலுப்பி கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்…. தேவையான தண்ணீரை இங்கே சேர்க்கவும். சமையல் செய்த பின் சேர்க்காதீர்கள்….

மிக்சியில் அரைத்த கலவையை மோரில் கரைத்து, பின்னர் வாணலியில் வெங்காய வதக்கலோடு விட்டு, சிம்மரில் லேசாக கொதி வரும் வரை வதக்கவும்….

கடைசியாக, சிறிது கடுகு, பொருங்காயம் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் தாளிக்கவும்…. கவனிக்க …. தேங்காய் எண்ணெய்….

என்னது? உப்பு போட மறந்துட்டேனா? கையில் ஒரு ஸ்பூன் டேஸ்ட்டுக்கு ஏற்ப உப்பைச் சேருங்கள்… உப்பு ஒரு ஸ்டெப் கம்மியாக இருப்பதே மோர்க்குழம்பிற்கு அழகு!

ஆர்யாஸ் மோர்க்குழம்பின்
ஆஸ்தான இரசிகன்….

டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories