வெளிநாடுகளிலிருந்து நுாதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.71 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்; மூதாட்டிகள் உள்பட 3 பேர் கைது…!

kithau - 2026

இலங்கை மற்றும் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒரு மூதாட்டி  உட்பட 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

துபாயில் இருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.

அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அட்னன் (36). கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சிலிபுரகுமான் (25) இருவரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று விட்டு வந்தனர்.

கேரளாவை சேர்ந்தவர் சுற்றுலா சென்றுவிட்டு சென்னைக்கு வரவேண்டிய அவசியம் என்ன என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனா். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் இருவரின் உடமைகளை சோதனையிட்டனர் அதில் எதுவும் இல்லை.

அதனைதொடா்ந்து இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கலைந்து சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் இருவரின் உள்ளாடையில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இருவரின் உள்ளாடையிலும் மொத்தம் 1,950 கிராம் தங்க கட்டிகள் இருந்தன.

அதன் சர்வதேச மதிப்பு ரூ.66.5 லட்சம். இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது.

அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.இலங்கையை சேர்ந்த சீதாலெட்சுமி (63). சுற்றுலா பயணியாக கொழும்பிலிருந்து சென்னை வந்துள்ளார்.

அவரையும் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அவரது உடமைகளில் எதுவும் இல்லை.

அதனைதொடா்ந்து சீதாலெட்சுமியை தனியறைக்கு அழைத்துச் சென்று அவரது பெண் அதிகாரிகள் உதவியுடன் சோதனை செய்ததில் உள் ஆடையில் 159 கிராம் தங்க நகைகள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

அதன் சர்வதேச மதிப்பு ரூ.4.5 லட்சம், சீதாலெட்சுமியையும் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories