December 7, 2025, 4:17 AM
24.5 C
Chennai

வெளிநாடுகளிலிருந்து நுாதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.71 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்; மூதாட்டிகள் உள்பட 3 பேர் கைது…!

kithau - 2025

இலங்கை மற்றும் துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்த ஒரு மூதாட்டி  உட்பட 3 பேரை சுங்கத்துறையினர் கைது செய்தனர்.

துபாயில் இருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது.

அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அட்னன் (36). கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சிலிபுரகுமான் (25) இருவரும் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் சென்று விட்டு வந்தனர்.

கேரளாவை சேர்ந்தவர் சுற்றுலா சென்றுவிட்டு சென்னைக்கு வரவேண்டிய அவசியம் என்ன என்று அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனா். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் இருவரின் உடமைகளை சோதனையிட்டனர் அதில் எதுவும் இல்லை.

அதனைதொடா்ந்து இருவரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கலைந்து சோதனை நடத்தினர்.

அப்போது அவர்கள் இருவரின் உள்ளாடையில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இருவரின் உள்ளாடையிலும் மொத்தம் 1,950 கிராம் தங்க கட்டிகள் இருந்தன.

அதன் சர்வதேச மதிப்பு ரூ.66.5 லட்சம். இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது.

அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.இலங்கையை சேர்ந்த சீதாலெட்சுமி (63). சுற்றுலா பயணியாக கொழும்பிலிருந்து சென்னை வந்துள்ளார்.

அவரையும் சுங்க அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தினர். அவரது உடமைகளில் எதுவும் இல்லை.

அதனைதொடா்ந்து சீதாலெட்சுமியை தனியறைக்கு அழைத்துச் சென்று அவரது பெண் அதிகாரிகள் உதவியுடன் சோதனை செய்ததில் உள் ஆடையில் 159 கிராம் தங்க நகைகள் மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

அதன் சர்வதேச மதிப்பு ரூ.4.5 லட்சம், சீதாலெட்சுமியையும் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் துபாய், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.71 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories