நாணயம் காத்த நடத்துனா் நாற்பது ஆயிரம் ரூபாய் மீட்ட பயணி; பொதுமக்கள் பாராட்டு…..!

MANI 2 2 - 2026

கோபி அருகே பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது.

இந்த பஸ் கோபி அருகே உள்ள குருமந்தூர் வந்தபோது, அதில் அந்த பகுதியை சேர்ந்த தனலட்சுமி (வயது 45) என்ற பெண்ணும், மற்றொரு பெண்ணும் ஏறினர்.

அப்போது அந்த பஸ்சில் 73 பயணிகள் இருந்தனர்.

பஸ்சின் முன் பக்க இருக்கையில் உட்கார்ந்திருந்த தனலட்சுமி ஒரு பையில் ரூ.40 ஆயிரத்தை வைத்து அதன் மீது பேப்பரை போட்டு மறைத்து வைத்திருந்தார்.

கோபி காலேஜ் பிரிவு நிறுத்தம் வந்ததும், தனலட்சுமியும், அவருடன் வந்த பெண்ணும் பஸ்சில் இருந்து இறங்கி நடக்க தொடங்கினர்.

சிறிது தூரம் சென்றதும் தன் கையில் பை இல்லாததை கண்டதும் தனலட்சுமி பதைபதைத்தார்.

NADHUNAAR 2 - 2026

மேலும் பதற்றத்துடன் அவர் பணப்பை கீழே விழுந்து விட்டதா? என சுற்றும் முற்றும் பார்த்தார். அப்போது தான் அவருக்கு பணப்பையை பஸ்சில் தவற விட்டது நினைவுக்கு வந்தது.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

உடனே பின்னால் வந்த பஸ்சில் ஏறி கோபி பஸ் நிலையத்துக்கு தனலட்சுமி வந்தார்.

ஆனால் அந்த பஸ் அங்கு வரவில்லை. இதனால் அவருக்கு மேலும் பதற்றம் ஏற்பட்டது.

உடனே அவர் அங்கிருந்த தனியார் பஸ் நேர காப்பாளரிடம் (டைம் கீப்பர்) அந்த தனியார் பஸ் குறித்து கேட்டார்.

உடனே அந்த தனியார் பஸ் நேரம் காப்பாளர், இதுபற்றி பஸ்சின் உரிமையாளர் அருணுக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் அருண், செல்போன் மூலம் தன்னுடைய பஸ் கண்டக்டரான சவுந்தரராஜனிடம் பணம் உள்ள பை குறித்து கேட்டார்.

அதற்கு கண்டக்டர் சவுந்தரராஜன், ‘பணம் உள்ள பை பஸ்சில்தான் உள்ளது. தொலையவில்லை. நான் பத்திரமாக எடுத்து வைத்துள்ளேன்.

தற்போது பெட்ரோல் பங்க்கில் பஸ்சுக்கு டீசல் நிரப்பி கொண்டு உள்ளேன். டீசல் நிரப்பியதும் பஸ் நிலையம் செல்வேன். அங்கு சென்றதும் அந்த பெண்ணிடம் பணத்தை கொடுத்துவிடுகிறேன்,’ என்றார்.

இதைத்தொடர்ந்து பணம் பத்திரமாக பஸ் கண்டக்டரான சவுந்தரராஜனிடம் உள்ளது என தனலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

பின்னர் பஸ்சை எதிர்பார்த்து அவர் அங்கு காத்திருந்தார். சிறிது நேரத்தில் பஸ் வந்ததும் தனலட்சுமி ஓடோடிச்சென்று கண்டக்டர் சவுந்தரராஜனிடம் பணப்பையை கேட்டார்.

இது உங்கள் பணம் என்பதற்கான ஆதாரத்தை கொடு்ங்கள் என அவரிடம் சவுந்தரராஜன் கேட்டார். உடனே தனலட்சுமி, ‘இது மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் வசூலித்த பணம்.

இந்த பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு செல்கிறேன்’ என்றதுடன், தன்னிடம் இருந்த வங்கி புத்தகத்தையும் காண்பித்தார்.

உடனே அந்த பணத்தை தனலட்சுமியிடம் சவுந்தரராஜன் வழங்கினார். பஸ்சில் தவற விட்ட பணத்தை பத்திரமாக எடுத்து உரியவரிடம் ஒப்படைத்த கண்டக்டரை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories