தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம் மீண்டும் நடந்தது. 8ம் நாளில் தப்பிய சிறுமி…..!

chiled marrag 1 1 - 2026

நிலக்கோட்டை அருகே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமனம் மீண்டும் நடந்தது. திருமணம் முடிந்த 8 நாளில் சிறுமி தப்பி வந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள உச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி.

இவரது மகன் உமேஷ் பாண்டி (27). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கடந்த 6-ந்தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. அந்த சிறுமி சென்னையில் படித்து வந்த நிலையில், இந்த திருமண ஏற்பாட்டினை விரும்பவில்லை.

இதனிடையே திருமண ஏற்பாடு குறித்து குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி சம்பவ இடத்திற்குச் சென்ற சமூக நலத்துறை குழுவினர் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

சிறுமியை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், திருமண ஏற்பாடுகளை கைவிட்டுவிட்டதாகவும், மீண்டும் படிக்க வைக்கப்போவதாகவும் அவரது உறவினர்கள் எழுதிக்கொடுத்துவிட்டு சிறுமியை 4-ந் தேதி அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி, கடந்த 6-ந்தேதி அந்த சிறுமியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 8 நாட்களாக உமேஷ் பாண்டி வீட்டில் அந்த சிறுமி சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே உமேஷ் பாண்டி நெருங்கும் போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி, அந்த சிறுமி தன்னை பாதுகாத்து வந்துள்ளார்.

8 நாட்கள் அமைதி காத்த அந்த சிறுமி அங்கிருந்து தப்பிக்க தருணம் பார்த்து காத்திருந்தார்.

இந்த நிலையில் பாண்டி வெளியே சென்றதை அறிந்து, வீட்டுக் காவலில் இருந்து தப்பினார்.

பின்பு, செம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து அவரை மீண்டும் குழந்தைகள் நலக்குழுவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த சிறுமி, தற்போது அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், தடுத்து நிறுத்திய குழந்தை திருமணத்தை மீண்டும் நடத்திய பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு ஏற்ற வகையில் வழக்குப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories