December 6, 2025, 8:31 AM
23.8 C
Chennai

தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம் மீண்டும் நடந்தது. 8ம் நாளில் தப்பிய சிறுமி…..!

chiled marrag 1 1 - 2025

நிலக்கோட்டை அருகே அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமனம் மீண்டும் நடந்தது. திருமணம் முடிந்த 8 நாளில் சிறுமி தப்பி வந்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்துள்ள உச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி.

இவரது மகன் உமேஷ் பாண்டி (27). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கடந்த 6-ந்தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. அந்த சிறுமி சென்னையில் படித்து வந்த நிலையில், இந்த திருமண ஏற்பாட்டினை விரும்பவில்லை.

இதனிடையே திருமண ஏற்பாடு குறித்து குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி சம்பவ இடத்திற்குச் சென்ற சமூக நலத்துறை குழுவினர் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

சிறுமியை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், திருமண ஏற்பாடுகளை கைவிட்டுவிட்டதாகவும், மீண்டும் படிக்க வைக்கப்போவதாகவும் அவரது உறவினர்கள் எழுதிக்கொடுத்துவிட்டு சிறுமியை 4-ந் தேதி அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் திட்டமிட்டபடி, கடந்த 6-ந்தேதி அந்த சிறுமியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 8 நாட்களாக உமேஷ் பாண்டி வீட்டில் அந்த சிறுமி சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே உமேஷ் பாண்டி நெருங்கும் போதெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி, அந்த சிறுமி தன்னை பாதுகாத்து வந்துள்ளார்.

8 நாட்கள் அமைதி காத்த அந்த சிறுமி அங்கிருந்து தப்பிக்க தருணம் பார்த்து காத்திருந்தார்.

இந்த நிலையில் பாண்டி வெளியே சென்றதை அறிந்து, வீட்டுக் காவலில் இருந்து தப்பினார்.

பின்பு, செம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து அவரை மீண்டும் குழந்தைகள் நலக்குழுவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த சிறுமி, தற்போது அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், தடுத்து நிறுத்திய குழந்தை திருமணத்தை மீண்டும் நடத்திய பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதற்கு ஏற்ற வகையில் வழக்குப் பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories