தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 331 பள்ளிகளில் பிள்ளைகளை பெற்றோரகள் சேர்ப்பதை தவிர்க்க ஆட்சியா் அறிவிப்பு…..!

SANMUGASUDRAM IAS 2 - 2026

சென்னையில் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இல்லாமல் 331 பள்ளிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உரிய அங்கீகாரமின்றி சுமார் 903 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது.

அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளும், கன்னியாகுமரியில் 18 சிபிஎஸ்இ பள்ளிகளும் அங்கீகாரமின்றி செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், 331 பள்ளிகள் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்குவதாக அறிவித்து, அந்த பள்ளிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.

அதில் பெரும்பாலானவவை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் உள்ளது.

இப்பள்ளிகளில் தமது பிள்ளைகளை சேர்ப்பதை பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அப்பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொது தேர்வுகள் எழுத இயலாத நிலையும் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories