February 23, 2026, 4:44 AM
25.9 C
Chennai

காஞ்சி கோயில் சிலை முறைகேட்டு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது!

rajappa gurukkal - 2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி வழக்கில் கோயில் குருக்களாக பணியாற்றிய ராஜப்பா குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1500 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சுவாமி சிலைகள் சேதம் அடைந்து விட்டன என்று கூறி புதிதாக ஐம்பொன் சிலைகள் செய்வதற்கு ரூபாய் 2.82 கோடி மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டது

ஆனால் இந்த தங்கத்தை சிலைகள் செய்வதற்கு பயன்படுத்தாமல் மோசடி செய்ததாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆலய முன்னாள் குருக்கள் ராஜப்பா, விசாரணை காலத்தின் போது, கனடா நாட்டுக்குச் சென்றிருந்தார்.  அவர் இங்கு இல்லாத நிலையில் இந்தியாவுக்கு அவர் திரும்பி வரும்போது, அவரைப் பிடித்து உடனடியாக தகவல் அளிக்கும்படி விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்!

இந்நிலையில் கனடாவில் இருந்து நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தார் ராஜப்பா குருக்கள். அவரை மும்பை போலீசார் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிலைத் திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்!

இதை அடுத்து ராஜப்பா குருக்களை ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories