காஞ்சி கோயில் சிலை முறைகேட்டு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது!

rajappa gurukkal - 2026

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி வழக்கில் கோயில் குருக்களாக பணியாற்றிய ராஜப்பா குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1500 ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சுவாமி சிலைகள் சேதம் அடைந்து விட்டன என்று கூறி புதிதாக ஐம்பொன் சிலைகள் செய்வதற்கு ரூபாய் 2.82 கோடி மதிப்பிலான 8.7 கிலோ தங்கம் பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டது

ஆனால் இந்த தங்கத்தை சிலைகள் செய்வதற்கு பயன்படுத்தாமல் மோசடி செய்ததாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கில் அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஆலய முன்னாள் குருக்கள் ராஜப்பா, விசாரணை காலத்தின் போது, கனடா நாட்டுக்குச் சென்றிருந்தார்.  அவர் இங்கு இல்லாத நிலையில் இந்தியாவுக்கு அவர் திரும்பி வரும்போது, அவரைப் பிடித்து உடனடியாக தகவல் அளிக்கும்படி விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்!

இந்நிலையில் கனடாவில் இருந்து நேற்று முன்தினம் மும்பை விமான நிலையத்திற்கு வந்தார் ராஜப்பா குருக்கள். அவரை மும்பை போலீசார் கைது செய்து தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சிலைத் திருட்டு வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிபதி இல்லத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்!

இதை அடுத்து ராஜப்பா குருக்களை ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து ராஜப்பா குருக்கள் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories