பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான நிறுவனத்துக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு

Perundurai sipcot - 2026

பெருந்துறை சிப்காட் பகுதியில் குளிர்பான நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அனுமதிக்கப்பட்டது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது!

இது தொடர்பாக நேற்று பொதுமக்கள் பெருந்துறை வட்டாட்சியரிடம் குளிர்பான கம்பெனிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்!

பெருந்துறை சிப்காட் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு குளிர்பான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பகுதியில் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்றும் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை உபயோகப்படுத்தி பொதுமக்களின் நீராதாரங்களை அழிக்கும் சூழல் உருவாகும் என்றும் புகார் எழுந்தது!

இதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன! தற்போது அந்த நிறுவனத்துக்கு அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது.  இந்நிலையில் பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் சுமார் 13 ஏக்கர் நிலம் தனியார் குளிர்பான நிறுவனத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது

மேலும் இவர்கள் கட்டிட பணிக்காகவும் குளிர்பான தயாரிப்பு களுக்காகவும் தற்போது தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்

தற்போது நிலவி வரும் கடும் குடிநீர் பற்றாக்குறை நேரத்தில் இதற்கு அனுமதி கொடுத்துள்ளது இப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தனியார் குளிர்பான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ள சிப்காட் நிர்வாகத்தை கண்டிக்கிறோம்! இப்போது தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை பயன்படுத்தும் இந்த நிறுவனம் குளிர் பானங்களைத் தயாரிக்கும்போதும் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும்! இதனால் 50க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து சுற்றுப்புறத்தில் உள்ள நீர் ஆதாரங்களை முற்றிலும் அழித்து விடுவார்கள்!

இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு நீர் சுற்றுவட்டார பகுதியை மாசடையச் செய்யும்! பெரும் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும்! எனவே இந்தக் குளிர்பான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினர்!

– கே.சி.கந்தசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories