December 6, 2025, 6:44 PM
26.8 C
Chennai

பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான நிறுவனத்துக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு

Perundurai sipcot - 2025

பெருந்துறை சிப்காட் பகுதியில் குளிர்பான நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க அனுமதிக்கப்பட்டது, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது!

இது தொடர்பாக நேற்று பொதுமக்கள் பெருந்துறை வட்டாட்சியரிடம் குளிர்பான கம்பெனிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்!

பெருந்துறை சிப்காட் பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு குளிர்பான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் இந்த பகுதியில் சுற்றுச்சூழல் கேடு ஏற்படும் என்றும் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீரை உபயோகப்படுத்தி பொதுமக்களின் நீராதாரங்களை அழிக்கும் சூழல் உருவாகும் என்றும் புகார் எழுந்தது!

இதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன! தற்போது அந்த நிறுவனத்துக்கு அனுமதி ரத்து செய்யப் பட்டுள்ளது.  இந்நிலையில் பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிப்காட்டில் சுமார் 13 ஏக்கர் நிலம் தனியார் குளிர்பான நிறுவனத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது

மேலும் இவர்கள் கட்டிட பணிக்காகவும் குளிர்பான தயாரிப்பு களுக்காகவும் தற்போது தினமும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்

தற்போது நிலவி வரும் கடும் குடிநீர் பற்றாக்குறை நேரத்தில் இதற்கு அனுமதி கொடுத்துள்ளது இப்பகுதி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தனியார் குளிர்பான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ள சிப்காட் நிர்வாகத்தை கண்டிக்கிறோம்! இப்போது தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரை பயன்படுத்தும் இந்த நிறுவனம் குளிர் பானங்களைத் தயாரிக்கும்போதும் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும்! இதனால் 50க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து சுற்றுப்புறத்தில் உள்ள நீர் ஆதாரங்களை முற்றிலும் அழித்து விடுவார்கள்!

இந்த நிறுவனத்தில் இருந்து வெளியாகும் கழிவு நீர் சுற்றுவட்டார பகுதியை மாசடையச் செய்யும்! பெரும் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும்! எனவே இந்தக் குளிர்பான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்” என்று கூறினர்!

– கே.சி.கந்தசாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories