அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி 23ஆம் தேதி காஞ்சிபுரம் வருகை!

Published:

Athevarathar - 2026

காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் காஞ்சி நகருக்கு வருகின்றனர்.

வரும் 23 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் நகருக்கு வருகிறார்! அன்று சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்யும் அவர் காஞ்சிபுரத்தில் தங்கி மறுநாள் காலை நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்தி வரதரை மீண்டும் தரிசனம் செய்கிறார்!

மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் வருகின்றனர்!

மோடி வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு வருகிறது! ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வரும் மோடி அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் காஞ்சிபுரம் கோயிலுக்கு செல்கிறார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

மோடி வருகையை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img