அத்திவரதரை தரிசிக்க, திமுக., எம்.பி.க்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சிபாரிசுக் கடிதங்கள் எழுதியுள்ளனர்.
அரக்கோணம் தொகுதி எம்.பி., ஜெகத்ரட்சகன் தன் குடும்பத்துக்காகவும், TKS இளங்கோவன் தனது உறவினருக்காகவும் அத்தி வரதரை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் எழுதியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பல்வேறு கேலியும் கிண்டல்களும் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப் பட்டு வருகின்றன. ஆயினும், திமுக., எம்.பி.,யாக தற்போது இருக்கும் ஜெகத்ரட்சகன், திருமால் பக்தியில் திளைத்தவர் என்பதும், ஆழ்வார்கள் ஆய்வு மையம் மூலம் ஆழ்வார்களின் தமிழை பிரபலப் படுத்துவதில் பின்னணியில் உள்ளவர் என்பதும் அவரது செயலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்கள் பலர்.



