செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு பாராட்டு…..!

DSC 0319 - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க சார்பில் பாராட்டு விழா நடந்தது.

செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் துவக்கப் பள்ளியில் வைத்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க செங்கோட்டை கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கிளைத்தலைவர் கந்iதாயபிள்ளை தலைமைதாங்கினார். செயற்குழு உறுப்பினர் அழகுமுத்து முன்னிலைவகித்தார். துணைத்தலைவர் இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இராஜகோபால்பாண்டியன் இறைவணக்கம் பாடினார். ஆறுமுகம்பிள்ளை குறள் விளக்கம் வாசித்தார். துணைச்செயலாளர் இளஞ்செழியன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் செண்பகக்குற்றாலம் வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தார். துணைத்தலைவர் இராமசாமி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து நூறாண்டுகள் பழமைவாய்ந்த அரசு ஆரியநல்லூர் துவக்கிப்பள்ளி துவக்க காலத்தில் 14 ஆசிரிய பெருமக்களுடன் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் சேர்க்கை விகிதம் படிபடியாக குறைந்து வந்தது.
கடந்த ஆண்டில் 7மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். இதனால் பள்ளி மூடுவிழா காணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் பள்ளி தலைமைஆசிரியர் கிளமென்ட்ரெஜீஸ் தீவிர முயற்சியால் தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து இந்தாண்டு 35 மாணவர்கள் கல்வி பயிலும் நிலைக்கு உயர்த்தி உள்ளார்.

DSC 0320 - 2026
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியர் கிளமென்ட்ரெஜிஸ்க்கு மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் விருது வழங்கி கௌரவபடுத்தினார்.
இந்நிலையில் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கூட்டத்தில் கிளைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் தலைமைஆசிரியரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிள் ஆறுமுகம், சுப்பையா, வேம்பு, முத்துப்பாண்டி, பெருமாள், பரமசிவன், எலிசபெர்ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் துணைச்செயலாளர் பொன்.சொர்ணவேலி நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories