செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு பாராட்டு…..!

DSC 0319 - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியில் மாணவா் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியருக்கு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க சார்பில் பாராட்டு விழா நடந்தது.

செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் துவக்கப் பள்ளியில் வைத்து தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க செங்கோட்டை கிளையின் செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கிளைத்தலைவர் கந்iதாயபிள்ளை தலைமைதாங்கினார். செயற்குழு உறுப்பினர் அழகுமுத்து முன்னிலைவகித்தார். துணைத்தலைவர் இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். இராஜகோபால்பாண்டியன் இறைவணக்கம் பாடினார். ஆறுமுகம்பிள்ளை குறள் விளக்கம் வாசித்தார். துணைச்செயலாளர் இளஞ்செழியன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் செண்பகக்குற்றாலம் வரவு-செலவு கணக்கு சமர்ப்பித்தார். துணைத்தலைவர் இராமசாமி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து நூறாண்டுகள் பழமைவாய்ந்த அரசு ஆரியநல்லூர் துவக்கிப்பள்ளி துவக்க காலத்தில் 14 ஆசிரிய பெருமக்களுடன் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர். இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் சேர்க்கை விகிதம் படிபடியாக குறைந்து வந்தது.
கடந்த ஆண்டில் 7மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வந்தனர். இதனால் பள்ளி மூடுவிழா காணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் பள்ளி தலைமைஆசிரியர் கிளமென்ட்ரெஜீஸ் தீவிர முயற்சியால் தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து இந்தாண்டு 35 மாணவர்கள் கல்வி பயிலும் நிலைக்கு உயர்த்தி உள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

DSC 0320 - 2026
அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்திய தலைமைஆசிரியர் கிளமென்ட்ரெஜிஸ்க்கு மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் விருது வழங்கி கௌரவபடுத்தினார்.
இந்நிலையில் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கூட்டத்தில் கிளைத்தலைவர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் தலைமைஆசிரியரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிள் ஆறுமுகம், சுப்பையா, வேம்பு, முத்துப்பாண்டி, பெருமாள், பரமசிவன், எலிசபெர்ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் துணைச்செயலாளர் பொன்.சொர்ணவேலி நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories