அருகிலிருந்த குழந்தையைக் காணவில்லை! பெற்றோர் பதபதைப்பு!

child theft 1 e1563178621563 - 2026சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக ஒரு குடும்பம் காத்துக்கொண்டிருந்தது.இந்நிலையில் இரவு நேரம் என்பதால் சிறிது கண் அசந்த நேரத்தில் தனது 3 வயது குழந்தையை தொலைத்துவிட்டனர். இதுகுறித்து பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினர் தனது 3 வயது ஆண்குழந்தையுடன் ரயிலுக்காக காத்திருந்தனர். இரவு 11:45 மணி என்பதால் இரவு உணவு அருந்தி விட்டு தனது குழந்தையுடன் ஓய்வு எடுத்துள்ளனர். சிறிது நேரம் பெற்றோர்கள் இருவரும் அயர்ந்து தூங்கிய நிலையில் குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்தது சிறிது நேரம் கழித்து அவர்கள் விழித்து பார்த்தபோது அவர்கள் குழந்தையை காணவில்லை.

இதுகுறித்து ரயில்வே அலுவலகத்தில் தங்களது குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்ததின் பேரில்  ரயில்வே போலீசார  அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது  ஒரு நபர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்வதை பார்த்து உள்ளனர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

அந்த நபர் பார்ப்பதற்கு அலுவலகம் செல்லும் நபர் போலவே இருந்துள்ளார்,கையில் ஒரு சிவப்பு கலர் பையை வைத்துக் கொண்டு குழந்தையை தூக்கிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து தங்களது குழந்தையை கண்டு பிடித்து தருமாறு பெற்றோர்கள் காவல் துறையினரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டுள்ளனர்.

புகாரை பெற்ற காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை அருகில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நபரை யாரேனும் கண்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவிப்பும் செய்தனர். இதையடுத்து திருவள்ளூர் அரக்கோணம் போன்ற ரயில் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அந்த நபரை யாரேனும் கண்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. காவல்துறை  தரப்பில் 5 தனிப்படைகள் அமைத்து குழந்தையை கண்டுபிடிக்கும் பணியினை தீவிரமாக்கி  வருகின்றனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Entertainment News

Popular Categories