அருகிலிருந்த குழந்தையைக் காணவில்லை! பெற்றோர் பதபதைப்பு!

child theft 1 e1563178621563 - 2026சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக ஒரு குடும்பம் காத்துக்கொண்டிருந்தது.இந்நிலையில் இரவு நேரம் என்பதால் சிறிது கண் அசந்த நேரத்தில் தனது 3 வயது குழந்தையை தொலைத்துவிட்டனர். இதுகுறித்து பெற்றோர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் ஒடிசாவைச் சேர்ந்த ராம் சிங் மற்றும் நீலாவதி தம்பதியினர் தனது 3 வயது ஆண்குழந்தையுடன் ரயிலுக்காக காத்திருந்தனர். இரவு 11:45 மணி என்பதால் இரவு உணவு அருந்தி விட்டு தனது குழந்தையுடன் ஓய்வு எடுத்துள்ளனர். சிறிது நேரம் பெற்றோர்கள் இருவரும் அயர்ந்து தூங்கிய நிலையில் குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்தது சிறிது நேரம் கழித்து அவர்கள் விழித்து பார்த்தபோது அவர்கள் குழந்தையை காணவில்லை.

இதுகுறித்து ரயில்வே அலுவலகத்தில் தங்களது குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்ததின் பேரில்  ரயில்வே போலீசார  அங்கு உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது  ஒரு நபர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்வதை பார்த்து உள்ளனர்.

அந்த நபர் பார்ப்பதற்கு அலுவலகம் செல்லும் நபர் போலவே இருந்துள்ளார்,கையில் ஒரு சிவப்பு கலர் பையை வைத்துக் கொண்டு குழந்தையை தூக்கிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து தங்களது குழந்தையை கண்டு பிடித்து தருமாறு பெற்றோர்கள் காவல் துறையினரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டுள்ளனர்.

புகாரை பெற்ற காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்களை அருகில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நபரை யாரேனும் கண்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவிப்பும் செய்தனர். இதையடுத்து திருவள்ளூர் அரக்கோணம் போன்ற ரயில் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டது.

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர் குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அந்த நபரை யாரேனும் கண்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. காவல்துறை  தரப்பில் 5 தனிப்படைகள் அமைத்து குழந்தையை கண்டுபிடிக்கும் பணியினை தீவிரமாக்கி  வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories