சென்னை நுங்கம்பாக்கம் அருகே குடிசைப் பகுதியில் தீ விபத்து

Published:

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நமசிவாயபுரம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை மதியம் குடிசை வீடுகளின் அருகில் போடப்பட்டிருந்த குப்பைகளில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். அதிலிருந்து பரவிய தீ குடிசை வீடுகளுக்குப் பரவியது. இதனால் குடிசைகளில் தீ பற்றி எரிந்தது. அடுத்தடுத்து உள்ள குடிசைகளிலும் தீ பரவியது. தகவலறிந்து, கீழ்ப்பாக்கம், எழும்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img