December 6, 2025, 11:29 AM
26.8 C
Chennai

கர்ப்பிணியை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கமுக்கமான காவல்துறை: சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு!

IMG 20220227 WA0024 - 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: பாஜக குற்றச்சாட்டு


கர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லை
என்றால் காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள் என பாஜக குற்றச்சாட்டு.

திருவண்ணாமலை நகராட்சியில் பாஜக பெண் வேட்பாளர்கள், கர்ப்பிணி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியது மற்றும் தேர்தலுக்கு பிறகு பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுகவினரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து, பாஜக சார்பில் திருவண்ணாமலையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கலந்துகொண்டு பேசும்போது, “பாஜக பெண் வேட்பாளர் மற்றும் கர்ப்பிணி நிர்வாகி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுத்து ஒரு வாரமாகியும் முதல் தகவல் அறிக்கையை காவல் துறையினர் பதிவு செய்யவில்லை. காவல் துறையை ஏவல் துறையாக திமுகவினர் பார்க்கின்றனர். நடைபயிற்சிக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

கர்ப்பிணி தாக்கப்பட்டது குறித்து வழக்கு கூட பதிவு செய்யவில்லை என்றால் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களே, காவல்துறை மீது எப்படி மரியாதை வைப்பார்கள்.

பாஜகவினர் சாதுவாக உள்ளனர். இதே நிலை நீடித்தால், பாஜகவினர் மீது கை வைக்கப்பட்டால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் ஆகியோர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

கர்ப்பிணி தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினரை கைது செய்ய வேண்டும்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்றுள்ள வெற்றியானது ஜனநாய கத்துக்கு கிடைத்த தோல்வி. மத்திய அரசின் திட்டங்களில், தி.மலை மாவட்டத்தில்தான் அதிகளவில் ஊழல் நடைபெற்றுள்ளது.

ஊழல் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. அடுத்து சிபிஐ நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவின் ஊழலை அதிமுக தட்டிக் கேட்காமல் பாஜகவினர் தட்டி கேட்பதால், அவர்களுக்கு கோபம் வருகிறது.

திமுகவின் அநீதியை பாஜக தட்டி கேட்கும்” என்றார். இதில், கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories