ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடிவு:

Published:

images 34 1 - 2026

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது:

சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளதால், சட்டப்பேரவையில் மீண்டும்  ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்டம் இயற்றுவதற்க்கான அதிகாரத்தை ஏற்கனவே நீதிமன்றம் வழங்கியுள்ளதால், நீதிமன்றத்திற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

95 சதவிகித பொதுமக்களின் கருத்தைக் கேட்டுதான் ஏற்கனவே இந்த சட்டம் இயற்றப்பட்டது. ஆன்லைன் ரம்மியால் தமிழக அரசுக்கு எந்த வருவாயும் இல்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.    

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img