10ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவில்லை”: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

Bandh - 2026

வரும் 10ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த சங்கத்தின் நிறுவுனர், மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 10ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொதுமக்கள் மீதும், வணிகர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய சுமை என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் 2010ல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு “எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலிய பொருட்களில் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்” என அனுமதி அளித்து விட்டு தற்போது “ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை” போல காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதுமட்டுமின்றி எதற்கெடுத்தாலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அரசியல் கட்சிகள் தாங்கள் தொடர்புடைய எந்த ஒரு வணிக நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்க முன் வருவதில்லை.

எனவே வரும் 10ம் தேதி காங்கிரஸ் விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவளிப்பதில்லை எனவும், அன்றைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்குதடையின்றி விநியோகம் செய்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி வருங்காலங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் எந்த அரசியல் கட்சிகளானாலும் முதலில் தாங்கள் தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டு அதன் கடிதத்தை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து விட்டு முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கட்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். -என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories