December 5, 2025, 4:02 PM
27.9 C
Chennai

10ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவில்லை”: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

Bandh - 2025

வரும் 10ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த சங்கத்தின் நிறுவுனர், மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 10ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொதுமக்கள் மீதும், வணிகர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய சுமை என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் 2010ல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு “எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலிய பொருட்களில் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்” என அனுமதி அளித்து விட்டு தற்போது “ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை” போல காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதுமட்டுமின்றி எதற்கெடுத்தாலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அரசியல் கட்சிகள் தாங்கள் தொடர்புடைய எந்த ஒரு வணிக நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்க முன் வருவதில்லை.

எனவே வரும் 10ம் தேதி காங்கிரஸ் விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவளிப்பதில்லை எனவும், அன்றைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்குதடையின்றி விநியோகம் செய்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி வருங்காலங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் எந்த அரசியல் கட்சிகளானாலும் முதலில் தாங்கள் தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டு அதன் கடிதத்தை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து விட்டு முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கட்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். -என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories