10ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவில்லை”: பால் முகவர்கள் சங்கம் அறிவிப்பு

Bandh - 2026

வரும் 10ம் தேதி நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, அந்த சங்கத்தின் நிறுவுனர், மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் 10ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பொதுமக்கள் மீதும், வணிகர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய சுமை என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் 2010ல் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு “எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோலிய பொருட்களில் விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம்” என அனுமதி அளித்து விட்டு தற்போது “ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதை” போல காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நீலிக்கண்ணீர் வடிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

அதுமட்டுமின்றி எதற்கெடுத்தாலும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அரசியல் கட்சிகள் தாங்கள் தொடர்புடைய எந்த ஒரு வணிக நிறுவனங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்க முன் வருவதில்லை.

எனவே வரும் 10ம் தேதி காங்கிரஸ் விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் ஆதரவளிப்பதில்லை எனவும், அன்றைய தினம் பொதுமக்களுக்கு பால் தங்குதடையின்றி விநியோகம் செய்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி வருங்காலங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் எந்த அரசியல் கட்சிகளானாலும் முதலில் தாங்கள் தொடர்புடைய வணிக நிறுவனங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அளிக்க உத்தரவிட்டு அதன் கடிதத்தை ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து விட்டு முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கட்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். -என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories