இஸ்லாமிய பெண் இந்து பையனை காதலித்து மணம் செய்தால் ‘விபச்சாரி’ பட்டமா?

love marriage muslim girl - 2026

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு “விபச்சாரி” பட்டம் வழங்கியுள்ளது தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை.

திருவையாறு வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் ஜமாஅத்தார்கள்-க்கு கடிதம் ஒன்று எழுதி அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த ஜமாத்தாரின் ஊரைச் சேர்ந்த தெற்குத் தெரு … அவர்களின் மகளான M.யாஸ்மினா என்ற பெண், கே.கார்த்திகேயன் என்ற மாற்று மத சகோதரருடன் செய்து கொண்ட காதல் திருமணம் “விபச்சாரம்” என்று கூறப்பட்டுள்ளது. அந்த முழுமையான கடிதத்தைப் படிக்க…

jamath invit - 2026இந்தக் கடிதத்தில், இத்தகைய காதல் திருமணம் சமுதாயத்தில் ஜமாத்தின் நிலைப்பாட்டை சேதப்படுத்துவதாகவும், இஸ்லாமியர்களால் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடத்தப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

hindu muslim marriage - 2026

முன்னதாக, இந்தத் திருமணம் குறித்த அழைப்பு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதை அடுத்தே இத்தகைய கடிதத்தை இவ்வாறு எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் சிலர் இந்தத் திருமணத்தை வரவேற்றனர். ஆனால் இந்தப் பெண் சார்ந்த சமூகத்தினரின் எதிர்வினையானது சமூக ஊடகங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இத்தகைய திருமணங்கள் “ஹலால்” இல்லை என்று ஒரு ட்விட்டர் வாசி கருத்து தெரிவித்துள்ளார். அந்த பெண்மணி அல்லாஹ்விற்கு பயந்திருந்தால், அவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

hindi muslim marriage - 2026

இந்தத் திருமணத்தை வரவேற்கும் சிலர், ஒரு காதல் திருமணத்தை “விபச்சாரம்” என்று  அறிவித்துள்ளதை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

எத்தனையோ அப்பாவி இந்துப் பெண்களை லவ் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாற்றி இழுத்துக் கொண்டு போய் திருமணம் செய்யும் முறையும், இதே போன்ற விபச்சாரம் என்ற வகையைச் சேர்ந்தது தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக வலைத்தளங்களில்!

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்று காட்டுவதுதான் இஸ்லாமிய நடைமுறையா என்றும் கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. கேரள லவ் ஜிஹாத் விவகாரத்தில் அகிலாவை இஸ்லாமியப் பெண்ணாக மாற்றியபோது அதைக் காதல் என்று வர்ணித்தவர்கள், ஒரு யாஸ்மினை மட்டும் விபசாரி என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

yasmin karthikeyan - 2026

இந்நிலையில் இஸ்லாமிய சமூகத்தினரிடம் இருந்து வெளிப்படையான எதிர்ப்பு வந்துள்ள நிலையில், புது மணத் தம்பதிகளான யாஸ்மினா மற்றும் கார்த்தி கேயனுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைத் தளங்களில் முன்வைக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

இதனிடையே, ஒரு இந்து மணமகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இஸ்லாமியப் பெண்ணை விபச்சாரி என விமர்சித்தும் , பத்வா அறிவித்தும் கடிதம் எழுதிய திருவாரூர் வட்டார உலமா முகம்மது அபுசாலிஹ்மாவிடம் தொலைபேசியில் கேள்வி கேட்கும் பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனின் உரையாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த உரையாடல்..

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories