ஐபிஎல்.,லில் சென்னை அணிக்கான இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு

Published:

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில்,. சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இந்த 2 அணிகளுக்கும் ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது அநீதி. போட்டியின் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவில் சூதாட்டம் எதுவும் நடைபெறவில்லை.

தற்போது தலைமறைவாக உள்ள லலித்மோடி உள்ளிட்ட சிலரின் சதி காரணமாக இந்த 2 அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பிகார் கிரிக்கெட் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்தச் சங்கம் நேர்மையான காரணத்துக்காக வழக்கு தொடரவில்லை. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு விதித்த 2 ஆண்டுகள் இடைக்காலத் தடையை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாதிட்டார். விசாரணைக்குப் பிறகு, ஏற்கெனவே இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img