உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்! 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு!

Madras High Court in Chennai - 2026

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்குவதை ஒட்டி, தமிழகம் உச்ச கட்ட பரபரப்பில் உள்ளது.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக., சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22ஆம் தேதி தமிழக ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், தமிழக முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இதை அடுத்து அந்த 19 பேருக்கும் எதிராக அதிமுக., நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் ஆளுநரிடம் மனு கொடுத்த ஜக்கையன், தனது நிலையை மாற்றிக் கொண்டார். எனவே எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி, அதிமுக கொறடா கடந்த ஆகஸ்டு 24 அன்று அவைத்தலைவருக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி, 18 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தொடர்ந்து செப்.18ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிவிப்பாணையும் வெளியிடக் கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதி கே. ரவிசந்திரபாபு விசாரிக்கத் தொடங்கினர். அவர் இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் கடந்த நவ.6 ஆம் தேதி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் 18 எம்.எல்.ஏ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை நீதிபதிகள் ஏற்றனர்.  தொடர்ந்து, கடந்த நவ.16 முதல் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு விசாரிக்கத் தொடங்கியது.  பின் ஜன.18 அன்று அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து, ஜன.23 அன்று அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்தன.

தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சி கவிழுமா, எம்.எல்.ஏ.,க்கள் தகுதி இழப்பு சரியானதா, அவைத்தலைவர் நடவடிக்கை சரியானதுதானா என்று விவாதங்கள் களை கட்டியுள்ளன. எப்படி இருப்பினும், பாதிக்கப் பட்ட தரப்பினர் நிச்சயம் உச்ச நீதிமன்றத்தை நாடுவர் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories