சென்ட்ரல் ரயில் நிலையம் எம்ஜிஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம்! அரசு அறிவிக்கை வெளியீடு!

chennai central railway station - 2026

சென்னை மத்திய ரயில் நிலையம் இனி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று அறிவிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்ட படி, தற்போது அரசு நோட்டிபிகேஷன் -அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் பாராட்டும் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்வது சரியாக இருக்காது. இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் சில உள்ளூர் ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அத்தகைய போக்கு இதுவரை இருந்ததில்லை. காரணம் ரயில்வே நிலையங்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவை.

centralrailwaystation - 2026

ஆனால் தமிழகத்தில், ஊருக்கு ஊர் இருக்கும் பேருந்து நிலையங்கள், நகர்கள் எல்லாம் திராவிட இயக்கத் தலைவர்களின் பெயர்களைத் தாங்கி, பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. இவர்களை விட்டால் தமிழகத்தில் வேறு தலைவர்களே இல்லை என்று கூறும் வகையில் தமிழகத்தில் எல்லாமே இந்த மூன்று நான்கு பெயர்களுடன் தான் இருக்கின்றன.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரயில்வே துறையில், தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மாநிலத்தை ஆளும் அதிமுக., தற்போது எம்.ஜி.ஆர்., பெயர் மாற்றத்தை செய்திருக்கிறது.

இது போல், வருங்காலத்தில் கருணாநிதியின் பெயரை எழும்பூர்க்கு வைக்க வேண்டும் என்று திமுக., நாளை கோரிக்கை வைப்பார்கள். அடுத்து ஜாதி கட்சித் தலைவர் அவர் ஜாதியை சார்ந்தவர் பெயரை ஓர் ரயில் நிலையத்துக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.

தமிழகத்தில் இவ்வாறு தலைவர்களின் பெயர்கள் வைப்பதால் பிரச்சனைகள் வரும் என்றுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு தலைவர்களின் பெயரையும் அனைத்து போக்குவரத்து கழகங்கள், மாவட்டத்தின் பெயர்களை தமிழக அரசு நீக்கியது. ஆகவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்யும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

இது மட்டுமில்லாமல் நெடுந்தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப் படுவதால் தாம்பரம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை தாம்பரம் என்றும், திரிசூலம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை விமானநிலையம் என்றும் பெரம்பூர் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை பெரம்பூர் என்றும் மாற்றம் செய்ய வேண்டும்… என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் ரயில் பயணியர் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories