December 6, 2025, 2:44 AM
26 C
Chennai

சென்ட்ரல் ரயில் நிலையம் எம்ஜிஆர் ரயில் நிலையமாக பெயர் மாற்றம்! அரசு அறிவிக்கை வெளியீடு!

chennai central railway station - 2025

சென்னை மத்திய ரயில் நிலையம் இனி புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று அறிவிக்கப் படும் என்று அறிவிக்கப் பட்ட படி, தற்போது அரசு நோட்டிபிகேஷன் -அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது.

அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும் பாராட்டும் பலரும் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்வது சரியாக இருக்காது. இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இடங்களில் சில உள்ளூர் ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் அத்தகைய போக்கு இதுவரை இருந்ததில்லை. காரணம் ரயில்வே நிலையங்கள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குபவை.

centralrailwaystation - 2025

ஆனால் தமிழகத்தில், ஊருக்கு ஊர் இருக்கும் பேருந்து நிலையங்கள், நகர்கள் எல்லாம் திராவிட இயக்கத் தலைவர்களின் பெயர்களைத் தாங்கி, பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. இவர்களை விட்டால் தமிழகத்தில் வேறு தலைவர்களே இல்லை என்று கூறும் வகையில் தமிழகத்தில் எல்லாமே இந்த மூன்று நான்கு பெயர்களுடன் தான் இருக்கின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரயில்வே துறையில், தங்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, மாநிலத்தை ஆளும் அதிமுக., தற்போது எம்.ஜி.ஆர்., பெயர் மாற்றத்தை செய்திருக்கிறது.

இது போல், வருங்காலத்தில் கருணாநிதியின் பெயரை எழும்பூர்க்கு வைக்க வேண்டும் என்று திமுக., நாளை கோரிக்கை வைப்பார்கள். அடுத்து ஜாதி கட்சித் தலைவர் அவர் ஜாதியை சார்ந்தவர் பெயரை ஓர் ரயில் நிலையத்துக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.

தமிழகத்தில் இவ்வாறு தலைவர்களின் பெயர்கள் வைப்பதால் பிரச்சனைகள் வரும் என்றுதான் பல ஆண்டுகளுக்கு முன்பு தலைவர்களின் பெயரையும் அனைத்து போக்குவரத்து கழகங்கள், மாவட்டத்தின் பெயர்களை தமிழக அரசு நீக்கியது. ஆகவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றம் செய்யும் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்.

இது மட்டுமில்லாமல் நெடுந்தூர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப் படுவதால் தாம்பரம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை தாம்பரம் என்றும், திரிசூலம் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை விமானநிலையம் என்றும் பெரம்பூர் ரயில் நிலையத்தின் பெயரை சென்னை பெரம்பூர் என்றும் மாற்றம் செய்ய வேண்டும்… என்றும் கோரிக்கை வைக்கிறார்கள் ரயில் பயணியர் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories