வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்

Published:

சென்னை:
வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
மூன்று நிறுவனங்கள் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சோதனை செய்வதற்கு மத்திய விசாரணைக் குழுவினர், எனது அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்தனர். குற்றச்சாட்டு கூறப்படும் இரு நிறுவனங்கள் எனது நண்பர்களுக்குச் சொந்தமானது. மூன்றாவது நிறுவனம் குறித்து எனக்குத் எந்தத் தகவலும் தெரியாது. எனது நண்பர்களின் நிறுவனத்தில் எனக்கோ, எனது குடும்பத்தினருக்கோ பங்கோ, உரிமையோ இல்லை. எனது அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கும், விசாரணை செய்வதற்கும் அவர்களிடம் எந்த முகாந்திரமோ, ஆதாரமோ அவர்களிடம் கிடையாது. வாசன் கண் மருத்துவமனையில் எனக்கோ, எங்கள் குடும்பத்தினருக்கோ எந்தத் தொடர்பும் கிடையாது. எங்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அங்கு பங்குதாரராகவோ, இயக்குநராகவோ இல்லை.
அண்மைக் காலமாக காங்கிரஸ் தலைவர், துணைத் தலைவர், இமாசலப் பிரதேச மாநில முதல்வர் ஆகியோருக்கு அடுத்தடுத்து ஏற்படுத்தப்படும் சிக்கலின் தொடர்ச்சியே, இந்த சோதனையும் என்றார் கார்த்தி சிதம்பரம்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img