வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு: தமிழக அரசு

Published:

சென்னை:
வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது.
வெள்ள நிவாரணம் தொடர்பாக, வழக்குரைஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என்று தகவல் அளித்தார்.
அதற்கு நீதிபதிகள், வெள்ள நிவாரணத்துக்காக பெறப்படும் நிதியை பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞர் யசோத் வரதனை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img