அட கஷ்ட காலமே! கருணாநிதியின் வாழ்க்கைய பள்ளிக்கூடத்துல வேற படிக்கணுமா?

ma.fa .pandiarajan - 2026

சென்னை: திமுக கோரிக்கை விடுத்தால் கருணாநிதியின் வாழ்க்கை, பள்ளியில் பாடமாகச் சேர்க்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டிராஜன் பதிலளித்தார்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்ற தொடங்கிய புதிதில், பள்ளிக்கூட பாடங்களைத்தான் முதலில் நாசம் செய்தார்கள். அற வழியில் செல்லத் தூண்டும், தமிழரின் பண்டைய இலக்கியங்கள், நீதி நூல்களை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கி விட்டு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று கொச்சை வார்த்தைகளால் சிந்தனையை சிதைத்து, சமூகத்தை நாசமாக்கும் நச்சுக் கருத்துகளை விதைத்தார்கள். தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவைப்போல் பேச்சாளர் தமிழகத்தில் பிறக்கவே இல்லை என்று மாணவர்கள் மனத்தில் ஆழப் பதித்தார்கள். ஈ.வே.ரா.வைப் போல் சமூக சீர்த்திருத்தவாதி உலகிலேயே இல்லை என்று மாணவர்களைப் படிக்க வைத்து மார்க் எடுக்க வலியத் திணித்தார்கள்.

உலகம் எங்கோ வேகமாகப் போய்க் கொண்டிக்க தமிழக மாணவன் மட்டும் தலை எழுத்தே என்று, தமிழகத்திலேயே உழன்று கொண்டு தலைவிதியை நொந்து கொண்டிருக்கக் காரணமாக அமைந்ததும் திராவிட இயக்கங்களே! கல்வித் துறையை சீரமைக்க வேண்டிய இந்த முக்கியமான தருணத்தில், மேலும் சீரழிக்க ஆர்வத்தைக் காட்டியிருக்கிறார் தமிழக கல்வித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

அண்மையில் மறைந்த திமுக., தலைவர் கருணாநிதி புத்தகங்களை எழுதியுள்ளார். சங்க இலக்கிய உரை என சகட்டு மேனிக்கு கொச்சைக் கருத்துகளைத் திணித்துள்ளார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஏராளம் என்று திமுக.,வினர் புகழும் அதே வேளையில், காசுக்கும் விருதுக்கும் விலை போகாத உண்மைத் தமிழ் ஆர்வலர்களோ முற்றிலும் மாறுபடுகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் நூல்கள் அரசுடமை ஆக்க வேண்டும் என திமுக.,வினர் கருதுகின்றனர். இதுகுறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் கருணாநிதியின் நூல்களை அரசுடமை ஆக்க வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை வந்தால், அரசு ஆவன செய்யும். கருணாநிதியின் படைப்புகளை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அதிமுக அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்காது. திமுக கோரிக்கை விடுத்தால் அரசு பாடத்திட்டங்களில் கருணாநிதி வாழ்க்கையைப் பாடமாகச் சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார் மாஃபா பாண்டியராஜன்.

மாஃபாவின் இந்தக் கருத்து, உண்மைத் தமிழ் ஆர்வலர்களையும், கல்வித் துறையில் சீர்திருத்தம் கோருபவர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories