ஏ.பி.பரதன் மறைவு: கருணாநிதி இரங்கல்

Published:

சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஏ.பி.பரதன் சனிக்கிழமை நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக., தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான ஏ.பி.பரதன், மறைந்துவிட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்ந்த ஈடுபாட்டால், இளம் வயதிலேயே தம்மை கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். சாதாரண மக்களுக்கான போராட்டங்களில் தம்மை ஒரு போராளியாக முன்னிறுத்திப் போராடியவர். தன்னலம் கருதாத உழைப்பினால் கம்யூனிஸ்ட் பேரியக்கத்தின் மூத்த தலைவராக உயர்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img