ஏ.பி.பரதன் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

Published:

சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் மறைவு இந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், உழைக்கும் வர்க்கத்தினர், ஏழைகள், பின்தங்கிய மக்களின் நலனுக்காக சுயநலமில்லா சேவையாற்றியுள்ளார்.

இந்திய அரசியல் வரலாற்றில் பல்வேறு திருப்பு முனை தருணங்களில் பேச்சுவார்த்தை நடத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்று சேர்த்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், அரசியல் நாகரிகத்துக்கும், தன்னலமில்லா சேவைக்கும் முன்னுதாரணமாக அவர் திகழ்கிறார். அவரது மறைவு இந்திய அரசியலில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

Related articles

Recent articles

spot_img