உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது… இப்ப தெரிஞ்சிக்கிட்டீங்களா?!: காட்டிக் கொடுக்கிறார் எடப்பாடியார்!

Published:

stalin edappadi - 2026

உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப் போகிறது என இப்போது தெரிகிறதா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:

உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை, தமிழக மக்களுக்கு ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். தேர்தலை சந்திக்க திமுக தலைவர் ஸ்டாலின் பயப்படுகிறார். உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துவிட்டு, மீண்டும் நீதிமன்றத்துக்கு அவர் செல்கிறார்.

தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் அவரது திட்டம். இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது. மக்களிடம் விஷமத்தனமான தகவலை பரப்பி அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் நினைக்கிறார்.

தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டதாக 3 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து கூறிக்கொண்டே தான் இருக்கிறார். அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும்… என்று கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

இதனிடையே, திமுக., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை..

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பின்பற்றாமல், #LocalbodyElections தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடன், மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழக மா.செ- MLA- MP.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img