‘தேக தான’ விழிப்புணர்வை ஏற்படுத்திய மோகன்லால் உடல் ராமசந்திரா மருத்துவமனைக்கு வழங்கல்

Published:

 

சென்னை சவுகார்பேட்டை ஸ்வயம்சேவகரும் சேவாபாரதியின் பணிகளில் தொடக்க காலம் முதல் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தவருமான மோகன்லால் இன்று விடியற்காலை 2-30 மணியளவில் காலமானார்.

அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அவரது உடல் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மனை கல்லூரிக்கு ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தானமாக அளிக்கப்பட்டது.
இந்த தேக தானம் குறித்து தன் வாழ்நாள் காலத்திலேயே பதிவு செய்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லோர் வட்டம், ஆதரவற்றோர்க்கான விடுதி சேவை,  சேவாபாரதி, கண்தான திட்டம்,  உறுப்புகள் தான திட்டம், தேக தான திட்டம், நியூரோதெரபி சிகிச்சை, ஆரோக்ய பாரதி,  ஸ்வாமி நாராயண் ஆன்மீக அமைப்பு, ஜெயின் சேவா சங்கம், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மருத்துவமனை தொண்டு திட்டங்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் தொடர்புடைய அனைத்து அமைப்புகளிலும் அவர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாற்றி வந்துள்ளார்.

மறைந்த மூத்த ஆர்.எஸ்.எஸ். பிரசாரக் ஸ்ரீசிவராம்ஜி வழிகாட்டுதலில் மோகன்லால் சேவைகள் செய்துவந்தார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

அவரது மறைவு பேரிழப்பு என்று சேவாபாரதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விவரம் பெற: ராம.ராஜசேகர்,
சேவாபாரதி, 94451 29386

Related articles

Recent articles

spot_img