போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி.,: வைரலாகும் வீடியோ!

ex mp arjunan quarells with police in omalur tolgate
ex mp arjunan quarells with police in omalur tolgate

ஓமலூர் டோல்கேட்டில் திமுக முன்னாள் எம்பி போலீசாருடன் தகராறில் ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

சேலம் முன்னாள் திமுக எம்பி நேற்று இரவு ஓமலூர் டோல்கேட்டில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோ பதிவு வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில் வழியே வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் கொரானோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சேலத்தை அடுத்த ஓமலூர் டோல்கேட்டில் நேற்று இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து திமுக முன்னாள் எம்பி அர்ஜுனன் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது தான் முன்னாள் எம்பி என்று கூறியதால் அதற்கான அடையாள அட்டையை காட்டுமாறு போலீசார் அவரிடம் கேட்டுள்ளனர்

இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் எம்பி அர்ஜுனன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே எஸ்ஐ., ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த போலீசார் முன்னாள் எம்பி அர்ஜுனை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே அர்ஜுனன் போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பான வீடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் அர்ஜுனன் ஒரு காவல் அதிகாரியை எட்டி மிதிக்கும் காட்சி இருந்ததால், இதுகுறித்து கருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories