கனமழை; நிலச்சரிவு: உதகை மலை ரயில் ரத்தானதால் பயணிகள் அவதி

Published:

உதகை: நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, காட்டேரி- ரன்னிமேடு ரயில் தடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவ்வழியாக 182 சுற்றுலாப் பயணிகளுடன் வந்த உதகை மலை ரயில் நிறுத்தப்பட்டது. நடுவழியில் தவித்த அவர்கள், பின்னர் அரசு பஸ் மூலம் உதகைக்கு அழைத்து வரப்பட்டனர். பலத்த மழை காரணமாக, உதகை-குன்னூர் இடையிலான ரயில் பாதையில் மரம் விழுந்தது. அந்தப் பாதையிலும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் அங்கே ரயில் போக்குவரத்து துவங்கியது.

Related articles

Recent articles

spot_img