தீமாபுர்: நாகலாந்தின் தீமாபுரில் பாலியல் பலாத்காரக் குற்றவாளி பொதுமக்களால் அடித்துக் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்கே 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், ‘நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,’ என்று தெரிவித்தார்.

