மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாயப் பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளரிப்பட்டி கண்மாயில் இன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் இன்று காலை 6 மணியளவில் வெள்ளைத் துண்டு வீச மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
அப்போது சுற்றி இருந்த மக்கள் கண்மாய்க்குள் இறங்கி தாங்கள் கொண்டு வந்த கச்சா, வலை, கூடை போன்ற மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டு மீன்களை பிடிக்க தொடங்கினர்.
இதில் நாட்டு வகை மீன்களான விரால், கட்லா, கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்கள் அவர்களுக்கு கிடைத்ததாக கூறினர்.






