ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 35.6 கிலோ தங்கம் பறிமுதல்..

Published:

889585 - 2026

சென்னை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) கிடைத்த ரகசியத் தகவலின்படி, கடந்த 27-ம் தேதி மதுரை – ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி சோதனையிட்டபோது, அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.18.34 கோடி மதிப்பிலான 35.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் காரில் இருந்த 3 பேரை பிடித்து அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img