spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்நெல்லைமகாசிவராத்திரி பூ விலை அதிகரிப்பு..

மகாசிவராத்திரி பூ விலை அதிகரிப்பு..

- Advertisement -

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று புஷ்பங்களோடு கொண்டாடப்படுகிறது.இதனால் தென்மாவட்ட பூ சந்தையில் பிரபலமான மதுரை , நாகர்கோவில் தோவாளை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனையானது.சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது. மதுரை மாட்டுத்தாவணி, நாகர்கோவில் தோவாளை மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

இந்துக்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் பெற்ற மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.சிறப்பு பூஜையில் சுவாமிக்கு மலர் அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் மலர் சந்தையில் பூக்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

இன்று சிவராத்திரியொட்டி பூக்களின் வரத்தும் அதிகமாக இருந்தது. மல்லிகை கிலோ பூ 1500 முதல் 2500 ரூபாய் வரை விற்கப்பட்டது. பிச்சி ரூ. 1,500, முல்லை ரூ. 1500, செவ்வந்தி ரூ. 200, சம்பங்கி ரூ. 300, செண்டுமல்லி ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மலர் சந்தையில் தாமரை பூக்கள் வழக்கமாக 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்கப்படுவது வழக்கம்.

ஆனால் இன்று மதுரை பூ மார்க்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தாமரைப்பூ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

நாகர்கோவில் அருகே தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு கேரளா,நெல்லை தென்காசி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் லாரி, டெம்போ மூலம் பூக்கள் வருகின்றன. தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால், அவற்றை வாங்கி செல்ல நெல்லை தென்காசி குமரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்பனையான பிச்சி நேற்று ரூ.450 முதல்ரூ 650உயர்ந்து ரூ.1,850-க்கு விற்பனையானது. இதேபோல் ஒரு கிலோ முல்லை ரூ.1000-ல் இருந்து ரூ.500 உயர்ந்து ரூ.1500-க்கும், தாமரை ஒரு பூ ரூ.40-க்கும் விற்பனையானது.

அரளி ரூ.300, மல்லிகை ரூ.800, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.400, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.40, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.40, கோழிப்பூ ரூ.30, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஸ் பாக்கெட் ரூ.25, பட்டன் ரோஸ் ரூ.160, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.80, சிவப்புக்கேந்தி ரூ.85, சிவந்தி மஞ்சள் ரூ.150, சிவந்தி வெள்ளை ரூ.170, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.130 என விற்பனையானது.

இதுகுறித்து பூவியாபாரிகள் கூறுகையில், “தற்போது பனி அதிகமாக பெய்து வருவதால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மார்க்கெட்டுக்கு பிச்சிப்பூ 2 டன் வரும். ஆனால் இன்று 500 கிலோ மட்டுமே வந்தது. தாமரை 10 முதல் 15 ஆயிரம் பூக்கள் வரும். ஆனால் உற்பத்தி குறைவால் 200 பூக்கள் வந்தன. இன்று சிவராத்திரி என்பதால் பூக்கள் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe