மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்!

Published:

krishna vesham anusham madurai - 2026
#image_title

மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை: திரளான பக்தர்கள் தரிசனம்.

மதுரை. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் கஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் மதுரை ஆண்டாள்புரம் , , விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது .

அனுஷ உற்சவம்மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம், மதுரை ஆண்டாள்புரம் விஸ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ,மகாபெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத் திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப் பெற்றது.

தொடர்ந்து , ருத்ரா அபிஷேகம் ,மகா தீபாராதனை நடைப்பெற்றது.இந்நிகழ்வினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related articles

Recent articles

spot_img