January 17, 2025, 7:18 AM
24 C
Chennai

உசிலம்பட்டி, தாராப்பட்டி பகுதி கோயில்களில் கும்பாபிஷேகம்!

#image_title

உசிலம்பட்டி அருகே கோயில் மகா கும்பாபிஷேகம்

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சாமி திருக்கோவில்.,இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.,

முன்னதாக கடந்த 13ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி மூன்று கால யாக பூஜைகளை செய்த சிவாச்சாரியார்கள், இன்று கோவிலின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.,

பின்னர் கருவறையில் உள்ள பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

,இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்.,

ALSO READ:  அரங்கனுக்கும் ஆவிக்கும் அந்தரங்க சம்பந்தம் காட்டிய விளாஞ்சோலைப் பிள்ளை

தாராப்பட்டி அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்:

மதுரை மாவட்டம் தாராப்பட்டி கிராமத்தில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .

தாராப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருமலை நாயக்கரால் வெயிலான் காணி என்று செம்பு பட்டையும் வழங்கப்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.

கொடுப்பிலி முத்தையா சாமி கோவில் இதற்கான கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் வெயிலான் வகையறா பங்காளிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

கடந்த 13-ஆம் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசை உடன் விநாயகர் பூஜை லட்சுமிஹோமம் சுதர்சன ஹோமம் ஆரம்பிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் ஆரம்பமாகியது தொடர்ந்து, மாலை 6 மணிக்கு தீர்த்த சங்கமம் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

ALSO READ:  இரண்டாம் சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் 108 சங்காபிஷேகம்!

தொடர்ந்து ,14 ஆம் தேதி காலை வேத பாராயணம் மூல மந்திர ஹோமம் மற்றும் முதல் கால பூர்ணாஹதி பூஜையுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனைத்து தெய்வங்களின் மூல மந்திர ஹோமம் வஸ்திரம் பிரதிஷ்டையுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, நேற்று காலை 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது

கும்பாபிஷேகத்தை அர்ச்சகர் சந்தோஷ் குமார் சர்மா முன்னின்று நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை, வெயிலான் வகையறா பங்காளிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

கோயிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம்; அரசு தலையிட கோரிக்கை!

மதுரை சோளங்குருணியில் 500 ஆண்டு பழமை வாய்ந்த கோவிலுக்கு பாதை விட மறுக்கும் தனியார் நிறுவனம் தொடர்பில் பிரச்னை ஏற்பட்டது.

அதானியைக் குறிவைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் – இழுத்து மூடல்!

பாரதத்தை - குறிப்பாக அதானியை - குறி வைத்த ஹிண்டன்பர்க் பயல் கடையை மூடி ஓட்டம்.... டிரம்ப் வருவதற்குள் டீப் ஸ்டேட் கூட்டங்கள் ஓடத் துவங்கியிருக்கின்றன.

பிப்.9ல் நெட்டாங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா பஜனாம்ருதம் போட்டிகள்!

கன்யாகுமரி மாவட்டம் நெட்டாங்கோடு அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில் பொங்கல் விழா-2025

பெரியாரைத் துணைக் கொள்! அரசியலில் புது அர்த்தங்கள்!

ஈ.வெ.ரா-வைத் திமுக ஆதரித்தால் என்ன, சீமான் கட்சி எதிர்த்தால் என்ன? இரண்டு கட்சிகளும் கோணலான அர்த்தத்தில் ஒளவையாரின் ஆத்திசூடி சொற்களை ஏற்கின்றன: பெரியாரைத் துணைக் கொள்!