கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு சிறை: விருதுநகர் நீதிமன்றத்தில் தீர்ப்பு

விருதுநகர்:
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 10 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, விருதுநகர் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கள்ள நோட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு விருதுநகர் மற்றும் சிவகாசியில் 500 மற்றும் 100 ரூபாய் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடந்த 18.2.2009 ல் விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகில் நின்று கொண்டிருந்த சிவகாசியைச் சேர்ந்த அமீர் அம்சா, எம்.புளியங்குளத்தைச் சேர்ந்த மனோகரன் ஆகிய இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சிவகாசியைச் சேர்ந்த செய்யது அக்பர், வெள்ளைச்சாமி, கருப்பையா, சுடலை ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 கள்ளநோட்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், இவர்கள் அளித்த தகவல்படி, கேரளா மாநிலம் புதிய துறையைச் சேர்ந்த சசி, செவரையை சேர்ந்த ரவி ஆகியோர் பிடிபட்டனர். பிடிபட்ட இவர்களிடம் இருந்து ரூ.67 ஆயிரத்து 500 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளநோட்டு கும்பலுக்கு, செவரையைச் சேர்ந்த ஜெபஸ்டின் லேபஸ் என்பவர் கள்ள நோட்டு தயாரிக்க பண உதவி செய்ததும், கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரையைச் சேர்ந்த சுனில் என்பவர் தொழில்நுட்ப ரீதியாக உதவி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பிடிபட்ட இந்த 10 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை விருதுநகர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விருதுநகர் சார்பு நீதிபதி பத்மா இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். அந்தத் தீர்ப்பில், குற்றம் சாற்றப்பட்ட 10 பேருக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறை தண்டனை வழங்கி ஏககாலத்தில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
மேலும் அமீர் அம்சா, மனோகரன், செய்யது அக்பர், வெள்ளைச் சாமி, கருப்பையா, சுடலை ஆகியோருக்கு தலா ரூ.11 ஆயிரம் அபராதமும், சசி, ரவிக்கு ரூ.16 ஆயிரம் அபராதமும், ஜெபஸ்டின் லேபஸ், சுனில் ஆகியோருக்கு ரூ. 21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

Entertainment News

Popular Categories