கிறிஸ்துவ மனைவி ஜெயிக்கணும்னு ஊரையே கிறிஸ்துவத்துக்கு மாற்றும் முன்னாள் பஞ். தலைவர்

mannarkoil conversion2 - 2026

பதவி வெறி பிடித்துத் திரியும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்…. பதவிக்காக சொந்த ஊர் மக்களை மதம் மாற்றம் செய்ய துடிக்கும் அதிசயம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மன்னார்கோவில். இது மிகச் சிறந்த வைணவத் தலம். இங்குதான் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான சேர மன்னராகத் திகழ்ந்த குலசேகர ஆழ்வாருக்கு திருவரசு எனப்படும் உயிர்நீத்த இடம் உள்ளது. இங்கே தனிக் கோயில் கட்டி, வைணவர்கள் போற்றித் தொழும் வகையில் வெளியூர்களில் இருந்தும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

இந்தக் கோயிலுக்கு ஒரு சிறப்பு அம்சமும் உண்டு. திருமாலின் அஷ்டாங்க விமானம் எனப்படும் மூன்று நிலை விமானங்களில் நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம் என மூன்று  நிலைகளில் பெருமாள் காட்சி தருகிறார். சிறப்புகள் மிகவும் பெற்ற திவ்யத் தலமான இங்கே இப்போது மதமாற்ற வேலைகளில் இறங்கியுள்ளார் இந்த ஊரின்  பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முகவேலு,.

இவர் தற்போது அல்லேலுயா கோஷ்டிக்கு மாறிவிட்டார். தனது ஹிந்து பெயரால் கடந்த முறை வெற்றி பெற்றவர், இந்த முறை இந்த பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தனது கிறிஸ்துவ மனைவியை ஜெயிக்க வைப்பதற்காக என்னவெல்லாமோ செய்து வருகிறார். அவற்றில் ஒன்று மதமாற்றம் உத்தி!

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

பார் புகழும் ராஜா கோபாலசாமி குடிகொன்டு இருக்கும் மன்னார்கோவில் ஊராட்சியில் தனது கிறிஸ்தவ மனைவியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் வெளியூர்களில் இருந்து கிறிஸ்துவ மத வியாபாரிகளை வரவழைத்து காலனி பகுதிகளில் இந்திரா காலனி, வெயிலான் தெரு மக்களை குறிவைத்து ஏற்கெனவே மதம் மாற்றி விட்டார்!

mannarkoil conversion1 horz - 2026

இந்நிலையில் நேற்று (23/09/2018) காலை 11 மணி அளவில் இந்த மத வியாபாரிகள் கூட்டம் ராஜகோபாலசாமி கோவில் முன்பு நின்று கொண்டு, மதமாற்ற நோட்டீஸ்களை வினியோகித்தனர். இதைக் கண்ட கோவில் அர்ச்சகர் உள்ளிட்டோர், காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முக வேலு. அவரும் கிறிஸ்துவர்களை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்த அவரது மனைவியும் அங்கே வந்து கோவில் அர்ச்சகரிடம் வாக்குவாதம் செய்து, பின்னர், இதுபோன்ற தவறு இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறி அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர்.

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

அப்போது அங்கு வந்த அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளரை சரிக் கட்டிய தங்கவேலுவும் அவர் மனைவியும் மேற்கொண்டு எதுவும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவரையும் அனுப்பி வைத்தனர்.

தனி மனித வெற்றிக்காக தன் இனத்தையே மதம் மாற்றத் துடிக்கும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரையும் அவரது மனைவியையும் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

மேலும், அவர்கள் இருவர் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் வேண்டுகோள் விடுத்தார். நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், மன்னார்கோவில் பகுதியில் இது தொடர்பாக போராட்டம் நடத்தப் படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories