கிறிஸ்துவ மனைவி ஜெயிக்கணும்னு ஊரையே கிறிஸ்துவத்துக்கு மாற்றும் முன்னாள் பஞ். தலைவர்

mannarkoil conversion2 - 2026

பதவி வெறி பிடித்துத் திரியும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்…. பதவிக்காக சொந்த ஊர் மக்களை மதம் மாற்றம் செய்ய துடிக்கும் அதிசயம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மன்னார்கோவில். இது மிகச் சிறந்த வைணவத் தலம். இங்குதான் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான சேர மன்னராகத் திகழ்ந்த குலசேகர ஆழ்வாருக்கு திருவரசு எனப்படும் உயிர்நீத்த இடம் உள்ளது. இங்கே தனிக் கோயில் கட்டி, வைணவர்கள் போற்றித் தொழும் வகையில் வெளியூர்களில் இருந்தும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

இந்தக் கோயிலுக்கு ஒரு சிறப்பு அம்சமும் உண்டு. திருமாலின் அஷ்டாங்க விமானம் எனப்படும் மூன்று நிலை விமானங்களில் நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம் என மூன்று  நிலைகளில் பெருமாள் காட்சி தருகிறார். சிறப்புகள் மிகவும் பெற்ற திவ்யத் தலமான இங்கே இப்போது மதமாற்ற வேலைகளில் இறங்கியுள்ளார் இந்த ஊரின்  பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முகவேலு,.

இவர் தற்போது அல்லேலுயா கோஷ்டிக்கு மாறிவிட்டார். தனது ஹிந்து பெயரால் கடந்த முறை வெற்றி பெற்றவர், இந்த முறை இந்த பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தனது கிறிஸ்துவ மனைவியை ஜெயிக்க வைப்பதற்காக என்னவெல்லாமோ செய்து வருகிறார். அவற்றில் ஒன்று மதமாற்றம் உத்தி!

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

பார் புகழும் ராஜா கோபாலசாமி குடிகொன்டு இருக்கும் மன்னார்கோவில் ஊராட்சியில் தனது கிறிஸ்தவ மனைவியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் வெளியூர்களில் இருந்து கிறிஸ்துவ மத வியாபாரிகளை வரவழைத்து காலனி பகுதிகளில் இந்திரா காலனி, வெயிலான் தெரு மக்களை குறிவைத்து ஏற்கெனவே மதம் மாற்றி விட்டார்!

mannarkoil conversion1 horz - 2026

இந்நிலையில் நேற்று (23/09/2018) காலை 11 மணி அளவில் இந்த மத வியாபாரிகள் கூட்டம் ராஜகோபாலசாமி கோவில் முன்பு நின்று கொண்டு, மதமாற்ற நோட்டீஸ்களை வினியோகித்தனர். இதைக் கண்ட கோவில் அர்ச்சகர் உள்ளிட்டோர், காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முக வேலு. அவரும் கிறிஸ்துவர்களை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்த அவரது மனைவியும் அங்கே வந்து கோவில் அர்ச்சகரிடம் வாக்குவாதம் செய்து, பின்னர், இதுபோன்ற தவறு இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறி அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

அப்போது அங்கு வந்த அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளரை சரிக் கட்டிய தங்கவேலுவும் அவர் மனைவியும் மேற்கொண்டு எதுவும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவரையும் அனுப்பி வைத்தனர்.

தனி மனித வெற்றிக்காக தன் இனத்தையே மதம் மாற்றத் துடிக்கும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரையும் அவரது மனைவியையும் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

மேலும், அவர்கள் இருவர் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் வேண்டுகோள் விடுத்தார். நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், மன்னார்கோவில் பகுதியில் இது தொடர்பாக போராட்டம் நடத்தப் படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories