மாயவரம் பட்டணப் பிரவேசம் போல் கரூர் திருவிழாவை நிறுத்த திமுக., சதி: பாஜக., ஆர்ப்பாட்டம்!

bjp karur protest - 2026

மயிலாடுதுறை பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி போல், கரூர் அருகே திருவிழாவினை நிறுத்த திமுக சதி – கரூர் மாவட்ட பாஜக ஆர்பாட்டம் ; மாவட்ட ஆட்சியரிடம் மனு

காலம், காலமாக நடத்தப்பட்டு வந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி பலரது கோரிக்கை மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களது அதிரடி நடவடிக்கையால் தமிழக அளவில் நேற்றிரவு விழாக்கோலம் பூண்டது.

இந்நிலையில், கரூர் அருகே பாரம்பரியமாக 100 ஆண்டுகள் நடந்து வந்த திருவிழாவிற்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடுகின்றது என்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் அதிரடியாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டனத்தினையும் பதிவு செய்துள்ளார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட, ஓமாந்தூர் பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும், இந்நிலையில், தனிநபர் ஒருவர் இந்த இடத்தினை ஆக்கிரமித்து கொண்டு கரகம் பாலித்தல், திருவிழா நடத்த கூடாது என்று தகராறில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், இப்பிரச்சினையை கையில் எடுத்த கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் முதலில் அவருடைய லெட்டர் பேடில் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்த நிலையில், அந்த ஊர் மக்களை மனு அளிக்க செய்தார்.

இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளின் விளையாடும் திமுக அரசினை கண்டித்தும், திருவிழா மற்றும் பாரம்பரிய விழாக்களை நடத்த முட்டுக்கட்டை போடும் திமுக அரசிற்கு கடும் கண்டனத்தினை தெரிவித்து கொண்டு, திருவிழா நடத்தாமல் பாதிக்கப்பட்டு வரும் அந்த ஊர் மக்களோடு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னேயே திமுக அரசினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி திடீர் ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு அந்த ஊர் மக்கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் என்று ஏராளமானோர் உடனிருந்தனர். இதுமட்டுமில்லாமல், திமுக அரசு அங்கம் வகிக்கும் மாநில அரசியலில், அந்த ஊர் அமைந்திருக்கும் பகுதி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி இருக்கும் தொகுதி, அந்த ஊர், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்டது அந்த பேரூராட்சி தலைவரும் திமுக வினை சார்ந்த ஒரு பெண்மணியாக இருக்கும் நிலையில், அந்த ஊர் மக்களுக்காக பாஜக திடீரென்று களத்தில் இறங்கியது அந்த ஊர் மற்றும் சுற்றுப்புற மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories