புகளூர் நகராட்சியில் பாஜக., கவுன்சிலர் தர்ணா!

gopinath bjp karur - 2026

புகளூர் நகராட்சியில் 24 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர்களில் தன்னந்தனியாக ஒருவராக பாஜக நகர்மன்ற உறுப்பினரின் திடீர் தர்ணாவினால் கரூர் அருகே பரபரப்பு – மாதம், மாதம் மக்களுக்காக கொடுக்கப்பட்டு வரும் மனுக்களை கண்டுகொள்ளாத திமுக நகராட்சியினை கண்டித்து நகர்மன்றத்திலேயே தர்ணா போராட்டம்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் நகராட்சி தற்போது தான் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அதன் தலைவராக திமுக வினை சார்ந்த நொய்யல் குணசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது வரை தலைவராக இருந்து வருகின்றார்.

இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகள் உள்ள நிலையில், ஒரு வார்டு மட்டும் அதிமுக வும், மற்றொரு வார்டு பாஜக வும் கைப்பற்றியது. மீதமுள்ள 22 வார்டுகளையும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கைப்பற்றியது. இந்நிலையில்,. பாஜக புகளூர் நகர தலைவராக உள்ள ரா.கோபிநாத், அந்த நகராட்சியின் 8 வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

இந்நிலையில், இன்று நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக நகர்மன்ற உறுப்பினரது வார்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர் பிரச்சினை, கழிவு நீர் பிரச்சினை உள்ளிட்ட எந்த வித பிரச்சினைகளையும், கண்டுகொள்ளாமல், திமுக நகராட்சியானது அப்படியே விட்டு விட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக பிரமுகரும், 8 வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான ரா.கோபிநாத், இதனை கண்டிக்கும் விதமாகவும், மக்களுக்காக போராட, நகராட்சி கூட்டத்தினை புறக்கணித்தார்.

நகராட்சி அலுவலகத்தின் உள் பகுதியிலேயே கூட்டம் தொடங்கியது முதல் கூட்டம் முடிந்த பின்னரும் அவரது தர்ணா போராட்டம் நீடித்தது. அதன் பின்னர் நகராட்சியின் ஆணையர் உறுதியளித்து, கண்டிப்பாக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று கூறியதையடுத்து அவரது தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தினால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நீடித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories