ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து பலி..

8b401ee0 3a22 4757 abfc 1a0de83d908f - 2026
திருவப்பூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் துள்ளிய காளை

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விழாவில் முறையான பாதுகாப்பு வசதி செய்யப்படாததால் வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் அருகில் உள்ள கண்மாயில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசு திருவிழாவை முன்னிட்டு இன்று கவிநாடு கண்மாய் அருகே உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது இதில் 900 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டார்கள் கண்மாய் திடலில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

கண்மாயில் இடுப்பளவு தண்ணீர் இருப்பதால் வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்ட காளைகள் கலெக்ஷன் பாயிண்டிற்கு சென்று விட்டு பயந்து ஓடி கண்மாயில் விழுந்து செல்லும் அபாயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய்க்குள் விழுந்து திக்கு தெரியாமல் நீந்தி சென்றன.

உரிமையாளர்கள் அவற்றை மீட்பதற்கு பெரும் பாடு ஏற்பட்டது. பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்ற போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் மட்டுமல்லாது காளைகளின் உரிமையாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான நிலையில் வெட்டன் விடுதி அருகே உள்ள கரம்பக்காடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது ஜல்லிக்கட்டு காளை ஒன்று கண்மாய் தண்ணீருக்குள் நீந்தி சென்றது.

பின்னர் நீரில் திக்குமுக்காடி திணறியது. வெளியே கரைக்கு வராமல் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கண்மாயில் காளை வெளியில் வர முடியாமல் தவித்த நிலையில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. ஜல்லிக்கட்டு காளை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Entertainment News

Popular Categories