December 5, 2025, 4:10 AM
24.5 C
Chennai

முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது!

IMG 20240812 WA0002 - 2025
#image_title

தமிழகத்தின் முன்னுதாரணமான முதல் பெண் ஓதுவார் கரூர் சுகாஞ்சனாவுக்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி” விருது வழங்கப்பட்டது.

கரூர் பரணி பார்க் கல்விக் குழும அறநெறி ஆசிரியராக ஆயிரக்கணக்கான மாணாக்கருக்கு தெய்வீகத் தமிழிசை, அறநெறி, நற்பண்புகளை தொடர்ந்து பல ஆண்டுகள் போதித்து, தற்போது சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் திருக்கோவிலில் “பெண் ஓதுவாராக” தெய்வத் தமிழ்த் தொண்டாற்றி வரும் கரூர்-வேலாயுதம்பாளையம் சிவ.சுகாஞ்சனாவுக்கு பரணி பார்க் கல்விக் குழுமம் மற்றும் கருவூர் மகா அபிசேகக் குழு இணைந்து ‘தெய்வீகத் தமிழிசை மாமணி’ என்ற உயரிய விருது வழங்கி பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.

கரூர் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் 26ஆம் ஆண்டு ஆடி தெய்வத் திருமண விழாவின் ஒரு பகுதியாக பெண் ஓதுவார் சிவ.சுகாஞ்சனாவின் தெய்வீகத் திருமுறை, தமிழிசைக் கச்சேரி கரூர் பரணி பார்க் கல்விக் குழும செயலர் பத்மாவதி மோகனரங்கன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கரூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பால்ராஜ், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் சரவணன், தமிழக காவல் துறை கண்காணிப்பாளர் முத்துக்கருப்பண், தேனி சுந்தரலிங்க சுவாமிகள், பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், கருவூர் மகா அபிசேகக் குழு தலைவர் ஆனிலை பாலகிருஷ்ணன், செயலர் ஸ்காட் தங்கவேல், கரூர் மாவட்ட வர்த்தக சங்க செயலர் வெங்கட்ராமன், மூத்த பத்திரிக்கையாளர் சிவராமன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர் இணைந்து ‘பெண் ஓதுவார்’ சிவ.சுகாஞ்சனா கோபிநாத்க்கு “தெய்வீகத் தமிழிசை மாமணி’ விருது வழங்கி சந்தன மாலை பொன்னாடை அணிவித்து பாராட்டி கௌரவித்தனர்.

தொடர்ந்து, ‘பெண் ஓதுவார்’ சுகாஞ்சனா கோபிநாத்தின் தெய்வீகத் திருமுறை தமிழிசை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

பல ஆண்டுகள் அறநெறி ஆசிரியராகவும் தற்போது இளம் வயதிலேயே தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டும் முன்னுதாரணமான முதல் ‘பெண் ஓதுவாராகவும்’ சிறப்பாகத் தெய்வத் தொண்டாற்றி கரூருக்கு உலக அளவில் பெருமை சேர்த்து வரும் சிவ.சுகாஞ்சனா கோபிநாத்தை கரூர் மாவட்ட ஆன்மீக அன்பர்களும், பொது மக்களும், பக்த கோடிகளும், அனைவரும் உளமாரப் பாராட்டி வாழ்த்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories