திமுகவின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை-சசிகலா

தென்மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தீபாராதணையில் கலந்துகொண்டு 5-அடி உயர வெண்கல வேலினை கோவிலிலுக்கு காணிக்கையாக செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வேல் காணிக்கை செலுத்துவதற்காக வந்துள்ளேன். அதிமுகவை கைப்பற்றுவது என்பது அல்ல, அதிமுக எங்களுடைய கட்சிதான். தொண்டர்கள் அனைவரும் உள்ளனர். தொண்டர்களில் இருந்து தான் தலைவர்களை உருவாக்குகிறோம். என்னுடைய அரசியல் பயணம் விரைவில் தொடங்கப்படும்.

திமுகவின் ஓராண்டு ஆட்சியில் நிறைய செய்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் மக்களுடைய மனசு நிறைந்ததாக தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் ரொம்ப கஷ்டப் படுகிறார்கள். மின்சார தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு கொடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் மின்சாரமே வரவில்லை என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.வீட்டிற்கு ஆயிரம் ரூபாய் தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தார்கள். ஆனால் ஒரு வருடம் ஆகிவிட்டது இதுவரை கொடுக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை முதியோர் உதவித்தொகை கொடுக்க வில்லை. மொத்தத்தில் மக்கள் மனதில் இந்த ஆட்சி மீது வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது.
இன்னும் குறிப்பாக சொல்ல போனால் சட்டம்-ஒழுங்கு ரொம்ப சீர்கேடாக உள்ளது. சென்னை மாதிரி உள்ள இடங்களில் செயின் பறிப்பு மிக அதிகமாக உள்ளது. பெண்கள் இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்ல ரொம்ப கஷ்டப் படுகிறார்கள். மக்கள் யாரும் திருப்தியாக இல்லை. இதுதான் ஓர் ஆண்டு கால திமுக ஆட்சியின் பலனாக உள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ, நிச்சயமாக அதேமாதிரி எந்த குறையும் இல்லாமல் ஆட்சி செய்வோம். ஜெயலலிதா‌ ஆட்சியில் இருந்த போது எங்களுடைய கட்சிக்காரர்கள் போலீஸ் நிலையத்தில் எதுவும் கேட்க முடியாது. அந்த அளவுக்கு கட்டுப்பாடாக வைத்திருந்தார்கள். தற்போது திமுக ஆட்சியில் கரைவேட்டி கட்டியவர்கள்தான் போலீஸ் நிலையத்தில் அதிகமாக இருக்கிறார்கள் என மக்களே கூறுகின்றனர். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் மக்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.

அதுமட்டுமல்ல, நான் நிறைய கிராமங்களுக்கு சென்று வந்தேன் அங்கே உள்ள சிறு கடை வியாபாரிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், மாதந்தோறும் எங்களுக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்றும், சிறிய பழக்கடை, பூக்கடை வைத்துள்ளவர்களிடம் 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுங்கள் என திமுகவினர் மிரட்டும் பாணியில் கேட்பதாக கூறுகிறார்கள்.இது மாதிரியான சம்பவங்கள் முதல்-அமைச்சருக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை. இது மாதிரி சம்பவங்கள் நடக்காமல் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாகும் என்றார் சசிகலா.

202204221424519457 The trial of Sasikala on the 2nd day was completed SECVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories