ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலை..?

Published:

images 9 2 - 2026

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் பாஜக துணைத்தலைவர் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குக் பேட்டி அளித்த பாஜக துணைத்தலைவர் நாராயண் திருப்பதி, பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் இரட்டை இலை தொடர்பான வழக்கிற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்த நாராயண் திருப்பதி இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்றும் கூறினார்.

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img