‘கார்பரேட்’ அதானி, ‘காம்ரேட்’ பினராயி, ‘ஹிந்துத்வ’ மோடி!

modi in vizhignam - 2026

“கார்பரேட்” அதானி… “காம்ரேட்” பினராயி… “ஹிந்துத்வ” மோடி… விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா!

இப்போது சுற்றுச் சூழல் பாதிக்காதா? ஆமைகள் குஞ்சு பொறிக்க இடையூறாகாதா? மீன்கள் சாகாதா? பவளப் பாறைகள் சிதையாதா?

கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்துக்கு மிக அருகேதான் குளச்சல். அங்கே இந்தத் துறைமுகம் வந்திருக்க வேண்டியது! அதற்கு சுற்றுச்சூழல் போராளிகள், மண்ணைக் காப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திராவிடியாள்கள், இடதுசாரிகள், முற்போக்குகள், லிபரல்கள்… எல்லாம் எகிறி எகிறிப் போராடித் தடுத்துவிட்டார்கள்.

குஜராத் மாதி வேறு இடமானால் “கார்ப்பரேட்” அம்பானிக்கு மோடி நாட்டின் செல்வங்களை தாரை வார்த்துவிட்டார் – என்ற வானுக்கும் பூமிக்கும் எகிறுவார்கள்!

இது அவர்கள் ஆளும் மாநிலம் ஆயிற்றே? முதல்வர் பிணராயி விஜயன் ஆயிற்றே? தொழில் வளர்ச்சி வேண்டுமே?

எனவே சிவப்புக் கொடியை சுருட்டி மூலையில் வீசிவிட்டு – “கார்ப்பரேட்” அம்பானி உள்ளே வருவதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்! ஆனால் கம்யூனிஸ்டுகளிடம் ஒரு நல்ல வழக்கம் இருக்கிறது!

எந்த எந்தக் கொள்கைகளை அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் மாநிலங்களில் குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டு எதிர்க்கிறார்களோ… அதே கொள்கைகளை அவர்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மிகத் தீவிரமாக அமல்படுத்துவார்கள்!

அப்போது – “நாட்டின் துறைமுகங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது – உள் கட்டமைப்புகளை பெருமுதலாளிகள் கைகளில் விடுவது”- என்றெல்லாம் பேச மாட்டார்கள். இப்போது அவர்கள் பார்வையில் அதானி “கார்ப்பரேட்” அல்ல – கேரளாவில் அவர் முன்னேற்றத்துக்கான “காம்ரேட்”!

இதை விட ஒரு படி மேலே போனவர் மேற்கு வங்கத்தில் புத்ததேவ் பட்டாசார்யா! டாடாவின் கார் தொழிற்சாலை தொடங்க அனுமதி கொடுத்ததோடு நிறுத்திவிட்டு – மக்களிடம் நிலத்துக்கு ஏக்கருக்கு குறைந்த பட்ச விலை என்று அறிவித்துவிட்டு – யார் விற்கிறார்களோ போய் வாங்கிக் கொள் என்று டாடாவை அனுப்பி இருந்தால் பிரச்னை இல்லை!

ஆனால் புத்ததேவ் சிங்கூரில் விவசாயிகள் நிலங்களை அரசே கையகப்படுத்தி – ஈட்டுத் தொகை விவசாயிக்கு வழங்கிடும் வகையில் – டாடாவிடம் ஒப்படைக்கும் விதமாக செயல்பட்டார்.

இதைப்பற்றி இவர்களுடைய பங்காளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் – “ஜனசக்தி” பத்திரிகையில் தா.பாண்டியன் ஒரு கட்டுரையே எழுதினார்.

மீறிப் போராடிய விவசாயிகளை நந்திகிராமிலும் சிங்கூரிலும் ஈவிரக்கமில்லாமல் சுட்டுத் தள்ளியது புத்ததேவ் தலைமையிலான அப்போதைய CPM அரசாங்கம்!

எனவே கம்யூனிஸ்டுகள் எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் எதை எல்லாம் எதிர்ப்பார்களோ – அதை எல்லாம் அவர்கள் ஆளும் மாநிலங்களில் “கார்ப்பரேட்” துணையுடன் அமல்படுத்துவார்கள் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம்.

  • முரளி சீத்தாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories