சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி திட்டமிட்டபடி அக்டோபர் 1-ம் தேதி லாரிகள் ஸ்டிரைக்

Published:

சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தக்கோரி அக்டோபர் 1-ம் தேதி முதல் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், மத்திய போக்குவரத்து துறை செயலாளர் விஜய் ஷிப்பர் தலைமையில் இன்று அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

அதேசமயம் கடைசி முயற்சியாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் நாளை மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி அக்டோபர் 1-ம் தேதி லாரிகள் ஸ்டிரைக் நடைபெறும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img